ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகர் சங்கம் கட்டடம் கட்ட, நடிகர் சங்கத்தின் சார்பில் நட்சத்திர கிரிக்கெட் நடத்தப்பட இருக்கிறது. இதில் நடிகர்கள் 8 அணிகளாக பிரிந்து விளையாட இருக்கிறார்கள். வருகிற ஏப்ரல் 17ம் தேதி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிரமாண்டமாய் நடைபெற இருக்கிறது. இந்த நட்சத்திர கிரிக்கெட்டிற்கு ஒரு பக்கம் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. குறிப்பாக இயக்குநர் ஆர்.கே.செல்வமணி ஒரு விழாவிலேயே விமர்சித்தார். நடிகர் அஜித், சிம்பு போன்றவர்கள் இந்த கிரிக்கெட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பாக நடிகர் அஜித், கிரிக்கெட் போட்டி என்ற பெயரில் மக்களிடம் வசூல் செய்து ஏன்.? நடிகர் சங்க கட்டடம் கட்ட வேண்டும், நடிகர்களே ஆளுக்கு கொஞ்சம் பணம் கொடுத்து நடிகர் சங்க கட்டடத்தை கட்டி விடலாமே என்று பீல் பண்ணுவதாக சமூக வலைதளங்களில் செய்தி போய் கொண்டிருக்கிறது. நட்சத்திர கிரிக்கெட் தொடர்பாக சமூக வலை தளங்களில் ஒரு பெரிய யுத்தமே நடந்து வருகிறது.
இந்நிலையில் நடிகர் சங்க கிரிக்கெட்டிற்கு ஆதரவு தெரிவித்து தற்போது சமூக வலைதளங்களில் ஒரு அறிக்கை ஒன்று வைரலாக பரவி வருகிறது. இது நடிகர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டதா.? அல்லது வேறு யாராவது இதை வெளியிட்டார்களா.? என்று தெரியவில்லை. அந்த அறிக்கை முழுவிபரம் வருமாறு....
ஒரு பால் வியாபாரம் செய்பவர் பால் விற்பனை செய்து அதன் மூலம் அவருடைய தேவைகளை பூர்த்தி செய்கிறார். ஒரு தொலை தொடர்பு தகவல் சேவை மையம்POST PAID ,PREPAID, NET PACK, CALLER TUNE வசதிகளை அறிமுகம் செய்து அதன் மூலம் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்கின்றனர். அதே போல தான் நடிகர்கள் நடிகைகள் நலிந்த நாடக நடிகர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அவர்களின் வாழ்வு மேம்பட நட்சத்திர கிரிகெட் ஏற்பாடு செய்து அதன் மூலம் நலிந்த நாடக நடிகர்களின் வருமானத்திற்கு வழி செய்ய ஒற்றுமையுடன் செயல்படுகிறார்கள்.
சுய விளம்பரம்
நடிகர் சங்க கட்டிடம் என்பது தனிப்பட்ட நடிகருக்கோ, நடிகைகோ, உரிமையான ஒரு விஷயம் அல்ல. அது பொதுவான ஒன்று. இத நட்சத்திர கிரிகெட்டில் பங்குபெறும், ஆதரிக்கும் ஒவ்வொரு நடிகர்களும் தனது சொந்த செலவிலே கட்ட முடியும், ஆனால் நலிந்த நடிகர்களின் பங்கு வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே ஒரு பொது நிகழ்ச்சி ஏற்பாடு செய்து அதன் மூலம் நடிகர்கள் அனைவரும் சமம் என்பதை நிரூபிக்க உள்ளனர். ஒரு சில நடிகர்கள் தங்களது பண வசதியை காட்டவும், பொது குழுவில் கலந்து கொள்ளாமலும், தனது ரசிகர்களை கொண்டு தனது திரை குடும்பத்தையே விட்டுகொடுத்து அவர்கள் சுய விளம்பரம் செய்கிறார்கள். கலை துறை சார்ந்த எந்த ஒரு விழாக்களை முதலில் புறக்கணித்து வருபவர்கலும் அவர்களே.
நடிகர்கள் பிச்சைகாரர்கள் அல்ல
நட்சத்திர கிரிக்கெட்டால் மக்களின் பணம் சுரண்டபடுகிறது, நடிகர் சங்கம் பிச்சை எடுக்கிறது என்று தனது ரசிகர்களை தூண்டிவிட்டு விளம்பரம் செய்வதால் என்ன பயன்? நடிகர், நடிகைகள் பிச்சைகாரர்கள் அல்ல. அவர்கள் தங்களது நேரத்தை ஒதுக்கி நாடக நடிகர்கள் வாழ்வு முன்னேற அன்றைய தங்களது வருமானத்தை விட்டுவிட்டு நட்சத்திர கிரிக்கெட்டில் பங்கு கொள்கின்றனர். தனது ரசிகர்களுக்குகூட முக்கியத்துவம் தராத ஒரு சில நடிகர்களுக்கு, நாடக நடிகர்களின் முக்கியத்துவம் தெரிய வாய்ப்பு இல்லை.
இலவசமாக படம் திரையிட முடியுமா...?
சில நடிகர்கள் சொல்லுமாறு நடிகர் சங்க கட்டிடம் நடிகர்களின் சொந்த செலவில் கட்டப்படவேண்டும் மக்களை சுரண்ட கூடாது என்கின்றார்களே. அவர்கள் நடித்த படம் பார்க்க ரசிகர்கள் பணம் கொடுத்து நுழைவு சீட்டு வாங்கிய பிறகுதானே திரையரங்கம் உள்ளே விடுகிறார்கள். அந்நேரம் அந்த நடிகர்கள் என் ரசிகர்களிடம், மக்களிடம் காசு வாங்காதீர் என்று அறிக்கை விட வேண்டியது தானே? அல்லது தங்கள் நடித்த படம் மூலம் மக்கள் காசு சுரண்ட பட கூடாது என்று நினைத்தால் இலவசமாக படம் நடித்து திரையிட வேண்டியது தானே? இந்திய கிரிகெட் அணி விளையாட்டை காண நுழைவு கட்டணம் பெற்று தான் செல்லவேண்டும். அதற்காக இந்திய அணி விளையாட்டில் மக்கள் பணம் சுரண்ட படுகிறது என்று குற்றம் சாற்றுவர்களோ?
தன்னிடம் பணம் இருக்கு என்பதற்காக வீட்டில் இருந்து தனது பண ஆளுமையை காட்டும் சில நடிகர்களால் பணம் இல்லாத வாழ்வாதாரத்திற்கே கஷ்டப்படும் நடிகர்களின் மனதை எவ்வாறு அறியமுடிய்ம்? சினிமா என்பது ஒரு பொழுது போக்கு? அவர்கள் அவர்களது திரை குடும்ப தேவைகளை சரிசெய்ய அனைத்து நடிகர்களும் ஒன்றுகூடி நட்சத்திர கிரிகெட்டில் பங்கு கொள்கின்றனரே தவிர அவர்களது சொந்த செலவுக்கு அல்ல என்பதை அறியவேண்டும்.விவாதம் செய்யும் நடிகர்கள் ஒரே ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளவேண்டும் முதலில்அவர்கள் அவர்களின் திரை குடும்பத்திற்கோ, ரசிகர்களுக்கோ நாம் என்ன செய்தோம் என்று யோசித்து பார்க்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேற்சொன்ன விஷயங்கள் எல்லாம் ஒரு நடிகரை தாக்கியே அறிக்கையாக வெளியாகியிருக்கிறது குறிப்பிடத்தக்கது.