'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நாணி,சமந்தா,சுதீப் நடிப்பில் உருவான நான் ஈ திரைப்படம் தெலுங்கு,தமிழ் என பல மொழிகளில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது. பாகுபலி படத்தின் இயக்குனர் ராஜமௌலி இயக்கிய இப்படம் கிராபிக்ஸ் காட்சிகள் மற்றும் சுதீப்பின் வில்லத்தனம் என பல வகையில் பாராட்டுக்களையும் பெற்றது. நான் ஈ படத்தின் இரண்டாம் பாகத்தில் பாலிவுட்டின் பிரபல நடிகர் சல்மான் கான் நடிக்கவுள்ளதாக கதையாசிரியர் விஜேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார்.
ராஜமௌலியின் தந்தையான விஜேந்திர பிரசாத் ராஜமௌலியின் வெற்றிப் படங்களான மகதீரா, பாகுபலி போன்ற படங்களுக்கும் ரவுடி ராத்தூர், பஜ்ரங்கி பைஜ்ஜான் போன்ற ஹிந்தி படங்களிலும் கதையாசிரியராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் ராஜமௌலியின் நான் ஈ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க சல்மான் கான் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளார். பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தில் பிசியாக உள்ள ராஜமௌலி அடுத்ததாக நான் ஈ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.