ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள திரையுலகில் புதிதாக உருவாக இருக்கும் 'கமலா சுரையா' என்கிற ஒரு படம் பல விஷயங்களில் 'மீண்டும்' என்கிற வார்த்தையை உபயோகப்படுத்த வைத்துள்ளது. மலையாள திரையுலகமே வேண்டாம் சாமி என வெறுத்துப்போய் பாலிவுட்டிலேயே செட்டிலான வித்யாபாலன், 'உறுமி' படம் மூலம் மலையாளத்திற்கு வந்தாரே, அவரை மீண்டும் மலையாள உலகத்திற்கு அழைத்து வருகிறது இந்தப்படம். தேசியவிருது பெற்ற 'செல்லுலாய்டு' படத்தில் பிரபல இயக்குனர் கமலின் டைரக்சனில் நடித்து கேரள அரசு விருதுபெற்ற பிருத்விராஜ் மீண்டும் இந்தப்படத்தில் அவருடன் கூட்டணி அமைத்துள்ளார்.
அதேபோல 'உறுமி'யில் பிருத்விராஜுடன் நடித்த வித்யாபாலனை மீண்டும் அவருடன் ஜோடிசேர வைத்துள்ளது இந்தப்படம்... அதுசரி, வித்யாபாலனையே நடிக்க ஒப்புக்கொள்ள வைத்த இந்த கமலா சுரையா யார் என்றுதானே கேட்கிறீர்கள்.. கேரளாவில் பாரம்பரியமிக்க நாயர் குடும்பத்தில் கமலாவாக பிறந்து நாவல்கள், சிருகதிகள் மூலம் திரும்பிப்பார்க்க வைத்த எழுத்தாளராக உருவெடுத்து, இஸ்லாமல் ஈர்க்கப்பட்டு தனது 67வது வயதில் இஸ்லாமிய மதத்திற்கு கமலா சுரையாவாக மாறிய பெண்மையின் சுயசரிதையைத்தான் படமாக இயக்குகிறார் கமல். இந்தி, மலையாளம் என இருமொழிப்படமாக உருவாவதாலும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்பதாலும் தான் இதில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் வித்யாபாலன்.