ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' | 'ஆடு' படத்தின் மூன்றாம் பாகம் அறிவிப்பு | அனுபம் கெர் படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி | சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' |
எம்ஜிஆர் நடித்த அதிக படங்களில் வில்லனாக நடித்தவர் நம்பியார். படங்களில் வில்லனாக நடித்தபோதும் நிஜத்தில் ஹீரோ போன்று வாழ்ந்தவர். குறிப்பாக, படப்பிடிப்பு தளங்களில் கொடுக்கப்படும் உணவு வகைகளை அவர் சாப்பிட்டதே இல்லையாம். அவர் எங்கிருந்தாலும் அவரது வீட்டில் இருந்தே சாப்பாடு போய் விடுமாம். ஒருவேளை வெளியூர்களுக்கு செல்ல நேர்ந்தால் உதவியாளர்கள் சமைத்து கொடுப்பதைத்தான் சாப்பிடுவாராம். அதேபோல்தான் ராஜா ராணி, தெறி படங்களின் இயக்குனரான அட்லியும் வெளி சாப்பாடுகளை சாப்பிடுவதே இல்லையாம். அவருக்கு எப்போதுமே வீட்டில் இருந்து சாப்பாடு படப்பிடிப்பு தளத்துக்கு கொண்டு வரப்படுகிறதாம்.
இதுபற்றி அட்லி கூறுகையில், எனக்கு எங்க அம்மா, எனது மனைவி சமைக்கும் உணவுகள்தான் ரொம்ப பிடிக்கும். அதேபோல் ஆங்கில உணவு களை சுத்தமாக பிடிக்காது. ரைஸ் கண்டிப்பாக சாப்பிட்டாக வேண்டும். அப்போது தான் எனக்கு சாப்பிட்ட மாதிரி இருக்கும். அதனால் எனக்கு ஒவ்வொரு நாளும் வீட்டில் இருந்தே சாப்பாடு வரவைத்து சாப்பிடுகிறேன். சில சமயங்களில் வெளியூர் செல்லும்போது அங்கே உடன் வரும் எனது மனைவி பிரியா சமைத்து தருகிறார். நான் இப்படி நம்ம ஊர் சாப்பாடுகளை, குறிப்பாக வீட்டு சமையலை சாப்பிடுவதைப் பார்த்து இந்த காலத்து நம்பியார் என்று என்னைச்சுற்றியிருப்பவர்கள் சொல்கிறார்கள் என்கிறார்.