ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கெளதம்மேனன் இயக்கிய படங்களில் விண்ணைத்தாண்டி வருவாயா முக்கிய மான படம். தமிழில் சிம்பு-திரிஷாவை வைத்து இயக்கிய அவர், பின்னர் இந்தியிலும் இயக்கினார். ஆனால் அந்த படத்தின் வெற்றிக்குப்பிறகு, விஜய், சூர்யாவை வைத்து படங்கள் இயக்குவதாக இருந்தார். அந்த படங்கள் நடைபெறவில்லை. அதனால் கெளதம்மேனனின் மார்க்கெட் தடுமாறத் தொடங்கியது. ஆனால், அஜீத் நடித்த என்னை அறிந்தால் படத்தின் ஹிட்டுக்கு பிறகு மறுபடியும் எழுந்து நிற்கிறார் கெளதம்மேனன்.
இந்நிலையில், மீண்டும் சிம்புவைக்கொண்டு அச்சம் என்பது மடமையடா படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து ஜெயம்ரவி நடிக்கும் படத்தை தயாரிக்கும் கெளதம்மேனன், தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறாராம். அது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் என்கிறார்கள். முதல் பாகத்தில் நடித்த சிம்பு, அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் வாய்ப்பும் தனக்கே கிடைக்கும் என எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், இப்போது அந்த வாய்ப்பு தனுசுக்கு கைமாறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.