'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இசையமைப்பாளர் அனிருத்தை தான் நடித்த 3 படத்தில் அறிமுகம் செய்தவர் தனுஷ். அந்த படத்திற்காக அனிருத் இசையில் தனுஷ் எழுதிய ஒய் திஸ் கொலவெறி பாடல் உலகமெங்கிலும் ஹிட்டானது. ஆக, தான் ஒரு சிறந்த இசை யமைப்பாளரைத்தான் அறிமுகம் செய்திருக்கிறோம் என்று பெருமிதம் கொண்ட தனுஷ், அதையடுத்து தான் நடித்த அடுத்தடுத்த படங்களிலும் அனிருத்தை இசையமைக்க வைத்து அவரது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார்.
மேலும், அதை சரியாக பயன்படுத்திக்கொண்ட அனிருத்தும், ஹிட் பாடல்களாக கொடுத்து பின்னர் விஜய், அஜீத் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங் களிலும் இசையமைத்து குறுகிய காலத்தில் முன்னணி இசையமைப்பாளராகி விட்டார்.
இந்த நேரத்தில்தான் ஆபாச பீப் சாங் சர்ச்சையில் சிக்கினார் அனிருத். அதனால் சில முன்னணி ஹீரோக்களின் படங்களில் இருந்து அனிருத் பெயர் நீக்கப் பட்டதோடு, தனுஷ் புதிதாக நடித்த படங்களிலும் அவர் பெயர் இடம்பெறாமல் வேறு இசையமைப்பாளர்கள் இடம்பெற்றனர். இதனால் ஆபாச பாடல் சர்ச்சை காரணமாக அனிருத்துடன் இணைந்தால் தனது இமேஜ் பாதிக்கும் என்று தனுஷ் அவரை ஓரங்கட்டி வருவதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் இந்த யூகங்கள் அனைத்தையும் உடைத்தெறியும் வகையில், இன்று மலேசியா கோலாலம்பூரில் அனிருத் நடத்தும் இசை நிகழ்ச்சிக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ள தனுஷ், அனைவரும் அந்நிகழ்ச்சியை கண்டுகளிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.