ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தரமான படம் இயக்கியவர்களை புறக்கணிக்கும் சினிமாத்துறை, ஆபாசமான மற்றும் இளையதலைமுறையை தவறாக வழிநடத்தும்வகையில் படம் எடுத்தவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதுதான் ஆச்சர்யம். அங்காடித்தெரு போன்ற அற்புதமான படத்தை இயக்கிய வசந்தபாலன், உள்ளிட்ட பலர் இன்று எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. ஆனால் ஜி.வி.பிரகாஷ்குமாரை வைத்து 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' என்ற படு ஆபாசமான படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கின்றன.
'யூத்'களுக்காக படம் எடுக்கிறேன் என்ற பெயரில் ஆபாசமான காட்சிகள், வசனங்களை த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் பயன்படுத்தி இருந்தார் ஆதிக் ரவிசந்திரன். வணிக ரீதியில் இந்தப் படம் வெற்றியடைந்ததால் அவருக்கு ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. த்ரிஷா இல்லைனா நயன்தாரா படத்திற்கு பிறகு அவர் சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். அந்தப் படத்திற்குப் பிறகு, ஜீ.வி.பிரகாஷ்குமாரை நாயகனாக வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நாயகனாக நடிக்கவிருக்கும் படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கவிருக்கிறாராம்.
நல்ல கூட்டணிதான்....!