சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா |
தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்தவர் நடிகை நஸ்ரியா. “நேரம், ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடிப் பேசவும், திருமணம் எனும் நிக்காஹ்” ஆகிய ஐந்து படங்களில் மட்டுமே தமிழில் நடித்தார். மலையாளத்திலும் “மாட் டாட், நேரம், சலாலா மொபைல்ஸ், ஓம் சாந்தி ஓசானா, சம்சாரம் ஆரோக்கியத்தினு ஹானிகாரம், பெங்களூர் டேய்ஸ்” ஆகிய ஏழு படங்களில் மட்டுமே நடித்தார். தமிழ், மலையாளத்தில் மொத்தமாக 15 படங்களில் கூட நடிக்காதவருக்கு இன்னமும் ரசிகர்கள் மத்தியில் தனி மவுசு இருக்கிறது.
2014ம் ஆண்டு மலையாள நடிகரான ஃபகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார். இருந்தாலும் தமிழ் ரசிகர்களும், மலையாள ரசிகர்களும் நஸ்ரியாவை மறந்ததாகத் தெரியவில்லை. அவருடைய ஃபேஸ்புக்கில் அவரைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இன்னும் சொல்லப் போனால் மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால் ஆகியோரை விட ஃபேஸ்புக்கில் நஸ்ரியாவைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகம்.
நஸ்ரியாவை இதுவரை 72 லட்சத்திற்கம் மேற்பட்டவர்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் இதுவரை 40 லட்சத்தைக் கூடத் தாண்டவில்லை. இன்றைய இளம் நடிர்களான துல்கர் சல்மான், நிவின் பாலி ஆகியோர் கூட நஸ்ரியாவைத் தொடர்பவர்களின் எண்ணிக்கையில் பாதியைக் கூடத் தொடவில்லை.
தமிழ் நடிகைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் சமந்தா, த்ரிஷா ஆகியோரை விட நஸ்ரியாதான் ஃபேஸ்புக் தொடர்பாளர்களின் எண்ணிக்கையில் முன்னணியில் இருக்கிறார். இப்போதும் நஸ்ரியாவின் படம் டிவியில் ஒளிபரப்பானால் இளம் ரசிகர்கள் ஊரைக் கூடச் சுற்றாமல் வீட்டிற்குள்ளேயே டிவி பார்க்க உட்கார்ந்து விடுகிறார்கள். வேறு எந்த ஒரு நடிகைக்கும் இப்படி ஒரு பெருமை இல்லை என்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.