ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரோமியோ ஜூலியட், தனி ஒருவன், பூலோகம் என ஜெயம் ரவி நடித்த மூன்று படங்கள் கடந்த வருடம் வெற்றியடைந்ததால், அவர் நடித்த மிருதன் படம் தற்போது மிகப்பெரிய தொகைக்கு பிசினஸ் ஆகி உள்ளது. மிருதன் படத்தைப் போலவே விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படம் பெரிய விலைக்கு பிசினஸ் ஆகி இருப்பதுதான் ஆச்சர்யம்.
விஜய் ஆண்டனியிடமிருந்து பிச்சைக்காரன் படத்தை மொத்தமாக வாங்கியது கேஆர் பிலிம்ஸ் என்ற விநியோக நிறுவனம். தமிழகம் முழுக்க உள்ள அனைத்து ஏரியாக்களையும் தற்போது வெற்றிகரமாக வியாபாரம் செய்து முடித்திருக்கிறது கே ஆர் பிலிம்ஸ். நான், சலீம் என விஜய் ஆண்டனி நடித்த இரண்டு படங்களும் வெற்றியடைந்தன. அவரது மூன்றாவது படமான இந்தியா பாகிஸ்தான் ஓடவில்லை. எனவே தன்னுடைய மார்க்கெட்டை புரிந்து கொண்டு பிச்சைக்காரன் படத்தை நியாயமான விலைக்கு விற்றுள்ளார் விஜய் ஆண்டனி. அவரிடமிருந்து படத்தை வாங்கியவர்களும் நியாயமான விலைக்கே ஏரியாவாரியாக பிரித்து விற்றுள்ளனர். எனவேதான், மூன்று கை மாறியுள்ள நிலையிலும் பெரிய அளவுக்கு விலையை ஏற்றாமல் வியாபாரம் செய்துள்ளனர். இதனால் தியேட்டர்காரர்களும் நம்பிக்கையோடு பிச்சைக்காரன் படத்துக்கு தியேட்டர்களை கொடுக்க முன் வந்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி 350 தியேட்டர்களில் பிச்சைக்காரன் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். அண்மையில் தணிக்கைக்கு அனுப்பப்பட்ட பிச்சைக்காரன் படத்துக்கு சென்சாரில் யு சான்றிதழ் கிடைத்திருப்பதால், வரிவிலக்கு என்ற கூடுதல் லாபமும் கிடைக்கும் என்பதால் பிச்சைக்காரன் படத்தை திரையிட தியேட்டர்காரர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர். மார்ச் மாதம் 4ஆம் தேதி பிச்சைக் காரன் படம் வெளி வர உள்ளது.