ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
பாலிவுட் இயக்குனர் ராம் மத்வானி இயக்கத்தில், பிரபல நடிகை சோனம் கபூர் நடிப்பில் உருவான, 'நீர்ஜா' இந்திப் படத்தை, பாகிஸ்தானில் வெளியிட, அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. கடந்த 1986ல், மும்பையில் இருந்து, அமெரிக்காவுக்கு புறப்பட்ட, 'பான் ஆம் - 73' விமானம், கராச்சியில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டது. அப்போது, பயணிகளை காக்க முயன்ற விமான பணிப்பெண், நீர்ஜா பனோட், பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த உண்மை சம்பவத்தை வைத்து தயாரிக்கப்பட்ட, நீர்ஜா என்ற திரைப்படம், வரும் 19ல் வெளியாக உள்ளது. முதலில், இந்த படத்தை இறக்குமதி செய்து, திரையிட அனுமதி வழங்கிய பாக்., அரசு, திடீரென தடை விதித்துள்ளது. 'நீர்ஜா படத்தில், பாகிஸ்தான் மோசமாக சித்தரிக்கப்பட்டிருப்பதே இதற்கு காரணம்' என, பாக்., அரசு தெரிவித்துள்ளது.
'நீர்ஜா படம், இன்னும் தணிக்கைக்கே வரவில்லை' என, பாக்., திரைப்பட தணிக்கை குழு தெரிவித்துள்ளது. அதனால், யூகச் செய்திகளின் அடிப்படையில், நீர்ஜாவுக்கு, பாக்., தடை விதித்துள்ளதாக தெரிகிறது.