அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
'சென்னை 28' படத்தின் மூலம் விளையாட்டை மையமாக வைத்து விளையாட்டாக படமெடுத்து இயக்குனர் ஆனவர் வெங்கட் பிரபு. அதற்குப் பிறகு அவர் இயக்கிய 'சரோஜா, கோவா' ஆகிய படங்கள் வெற்றி பெறாமல் போனது. இருந்தாலும் 'மங்காத்தா' படத்தின் மூலம் வித்தியாசமான அஜித்தைக் காட்டி அவரும் தன்னை ஒரு இயக்குனராக அடையாளம் காட்டிக் கொண்டார். அந்த ஒரு வெற்றியே அவருக்கு அடுத்தடுத்து படங்களைப் பெற்றுத் தந்தது.
கார்த்தி நடித்த 'பிரியாணி', சூர்யா நடித்த 'மாசு என்கிற மாசிலாமணி' ஆகிய படங்களை இயக்கினார். ஆனால், இந்தப் படங்களும் தோல்வியடைந்ததால் அடுத்து எந்த வாய்ப்பும் கிடைக்காமல் இருந்து வந்தார். அவருக்கு ஏற்கெனவே படம் இயக்க அட்வான்ஸ் கொடுத்திருந்தவர்களும் அதைத் திருப்பிக் கேட்க ஆரம்பித்தனர்.
இதனால் தன்னை மீண்டும் நிரூபித்துக் காட்ட வேண்டிய கட்டாயத்திற்கு வெங்கட் பிரபு ஆளாகியிருக்கிறார். மற்ற யாரும் வாய்ப்பு தராததால் தானே சொந்தமாகத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து அதில் 'சென்னை 28' படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க உள்ளார். அடுத்த மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. மீண்டும் தான் ஆரம்பித்த இடத்திலிருந்தே தன்னுடைய அடுத்த கட்ட பயணத்தை வெங்கட் பிரபு ஆரம்பிக்க உள்ளார். விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.