டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ் நாட்டில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பேசினாலே பிரச்சினை வெடிக்கும். இந்த சூழ்நிலையில் இட ஒதுக்கீட்டினால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஜாதிகளில் உள்ள பணக்காரர்கள் மட்டுமே பயன் அடைகிறார்கள். மற்றவர்கள் கூலித் தொழிலாளிகளாவும், சிறுநீரகத்தை விற்று வாழ்கிறவர்களாகவும் இருக்கிறார்கள். இட ஒதுக்கீட்டில் படித்து வேலை பெற்று உயர் பதவியில் இருப்பவர்கள் அதன் பிறகு தஙகள் ஜாதி மக்களை திரும்பி பார்ப்பதும் இல்லை. அவர்கள் உயர்வுக்கு உழைப்பதும் இல்லை. எனவே இட ஒதுக்கீட்டில் மாற்றம் தேவை என வலியுறுத்தி ஒரு படம் எடுத்திருக்கிறார்கள். அந்தப் படத்திற்கு நல்லவாயன் நாரவாயன் என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். இட ஒதுக்கீட்டின் மூலம் படித்து கலெக்டராகவும், உயர் அதிகாரிகளாகவும் உயர்ந்தவர்கள் அந்த பதவிகளை தங்கள் மக்களுக்காக தூக்கி எறிந்து விட்டு வருகிற மாதிரியான கதையாம்.
அஜ்மல், ஆருஷி ஹீரோ, ஹீரோயின்களாக நடித்துள்ளனர், சந்தோஷ், பன்சி இரண்டாவது நாயகன் நாயகியாக நடித்துள்ளனர். நாசர், கோட்டா சீனிவாச ராவ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். ஆர்.பி.பட்நாயக் இசை அமைத்துள்ளார். பாஸ்கர்ராவ் தயாரித்து, இயக்கி உள்ளார்.