ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரஜினி, அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடித்த லிங்கா படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்கினார், ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்தார். "இந்தப் படத்தின் கதை என்னுடையது. நான் இயக்கிய முல்லைவனம் 999 என்ற படத்தின் கதை"" என்று கூறி ரவிரத்னம் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் இது யாருடைய கதை என்பதை சிவில் கோர்ட்டில் முடிவு செய்யலாம் அதுவரை தயாரிப்பாளர் 5 கோடி ரூபாயை கோர்ட்டில் கட்டி படத்தை வெளியிடலாம் என்று கூறியது.
சிவில் கோர்ட்டில் வழக்கு நடந்து வரும் நிலையில் தயாயரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்தார். இதில் ஒரு கோடி போதும் என்ற நீதிமன்றம் கூறியது. இதுவரை வழக்கில் எந்த முடிவும் எட்டப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் லிங்கா வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்றி விசாரணையை விரையில் முடிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி லிங்கா வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்ற இயலாது. மதுரை கூடுதல் முன்சீப் கோர்ட் வருகிற ஏப்ரல் மாதம் 30ந் தேதிக்குள் இந்த வழக்கை முடிக்க வேண்டும். தேவைப்பட்டால் தினமும் விசாரித்து முடிக்கலாம் என்று உத்தரவிட்டது.