டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கப் போவதுதான் நேற்றைய ஹாட் சினிமா நியூஸ். இந்த ஒரு செய்தியாலேயே நேற்று டிவிட்டரில் டிரென்டிங் அதிகமிருந்தது. கீர்த்தி சுரேஷ் நடித்து இதுவரை இரண்டு படங்கள்தான் வெளிவந்துள்ளது. அந்த இரண்டு படங்களும் சாதாரண ஹீரோக்களுடன் நடித்த படங்கள்தான். பொதுவாக விஜய், அஜித் போன்ற ஹீரோக்கள் தமிழில் முன்னணியில் இருக்கும் ஹீரோயின்களையோ அல்லது தெலுங்கு, ஹிந்தியில் முன்னணியில் இருக்கும் ஹீரோயின்களையோதான் தங்களது ஜோடியாக நடிக்க வைப்பார்கள்.
ஆனால், இன்றைய முன்னணி ஹீரோயின்கள் பலரும் ஆச்சரியப்படும் அளவிற்கு விஜய் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கீர்த்தி சுரேஷுக்கு எப்படிக் கிடைத்தது என பலரும் யோசித்து வருகிறார்களாம். நயன்தாரா, காஜல் அகர்வால், ஹன்சிகா, தமன்னா, சமந்தா ஆகியோரை எல்லாம் பின்னுக்குத் தள்ளி விட்டு கீர்த்தி சுரேஷ் அந்த வாய்ப்பைக் கைப்பற்றிவிட்டாரே என்று கோலிவுட்டிலும் ஆச்சரிய அலை வீசிக் கொண்டிருக்கிறது.
விஜய் சமீபத்தில் 'ரஜினி முருகன்' படத்தைப் பார்த்திருக்கிறார். அந்தப் படத்தில் கீர்த்தியின் அழகும், நடிப்பும் அவரை வெகுவாகவே கவர்ந்துவிட்டதாம். அதே சமயம் அடுத்து அவர் நடிக்க உள்ள படத்தில் நடிக்க உள்ள நாயகியின் தேர்வும் நடந்து கொண்டிருக்க, இயக்குனர் பரதனிடம் கீர்த்தி சுரேஷ் பற்றி சொல்லியிருக்கிறார். அடுத்த சில நாட்களில் கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்துவிட்டார்களாம்.
தனுஷ் ஜோடியாக நடித்துள்ள படமும், பாபி சிம்ஹா ஜோடியாக நடித்துள்ள 'பாம்பு சட்டை' படமும் வெளிவந்த பின் கீர்த்தி சுரேஷ் இன்னும் அதிகமாகப் பேசப்படுவார் என்கிறார்கள். இவற்றிற்கு அடுத்து விஜய் படமும் வெளிவந்தால் 2016 முடிவதற்குள் கீர்த்தி சுரேஷ் தமிழில் நம்பர் 1 இடத்திற்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.