ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சினிமாவில் வெற்றி கிடைக்கும் வரை யாரும் கவனிக்கவும் மாட்டார்கள், கண்டு கொள்ளவும் மாட்டார்கள். ஆனால், ஒரே ஒரு வெற்றி போதும், தலையெழுத்தையே மாற்றி விடும். அதன்பின் அந்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வது அவரவர் சாமர்த்தியம். சிலர் தொடர்ந்து அந்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வார்கள், சிலருக்கு அதை செய்யத் தெரியாமல் விட்டு விடுவார்கள். சிலரோ சில தோல்விகளுக்குப் பின் தடுமாறி மீண்டும் அந்த வெற்றியைக் கைப்பற்றி விடுவார்கள். தமிழ் சினிமாவில் இதற்கு உதாரணமாக பல பேரை சொல்லலாம். ஆனால், சமீபத்தில் இரண்டு நாயகர்களின் வெற்றி அவர்களது அடுத்த படங்களின் வியாபாரத்தை அப்படியே மாற்றிவிட்டது.
ஜெயம் ரவி கடந்த ஆண்டில் 'ரோமியோ ஜுலியட், தனி ஒருவன், பூலோகம்' என மூன்று வெற்றிகளால் முன்னணிக்கு வந்துவிட்டார். அடுத்து அவருடைய வெளியீடாக 'மிருதன்' படம் வரும் 19ம் தேதியன்று வெளியாகிறது. ரவியின் முந்தைய படங்களின் வெற்றி இந்தப் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் படத்தின் டிரைலர் வந்த பிறகு அது உறுதிப்படுத்தப்பட்டது. படத்தை இயக்கியுள்ள சக்தி சௌந்தர்ராஜனின் முந்தைய படமான 'நாய்கள் ஜாக்கிரதை' படமும் கமர்ஷியல் ரீதியான வெற்றிப் படமாக அமைந்தது. அதோடு 'மிருதன்' படத்தின் நாயகியாக லட்சுமி மேனனின் முந்தைய படமான 'வேதாளம்' படமும் வசூல் சாதனை புரிந்தது. இப்படி பல வெற்றிக் கூட்டணி 'மிருதன்' படத்தில் உள்ளதால் வியாபாரமும் மிதமிஞ்சி நடந்து வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அடுத்து, அதர்வா நடித்துள்ள 'கணிதன்' படம் இந்த மாதம் 26ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் டீசரும் திரையுலகத்தில் அதிகமாகக் கவனிக்கப்பட்டது. படத்தை இயக்கியுள்ள சந்தோஷ், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் எனபதும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. ஒரு விறுவிறுப்பான ஆக்ஷன் படமாக இந்தப் படம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதர்வா நடித்து இதற்கு முன்பு வெளிவந்த 'ஈட்டி' படம் சுமார் 9 கோடி ரூபாய் அளவிற்கு தமிழ்நாட்டில் வசூலைக் கொடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள். அதனால் 'கணிதன்' படத்தை வாங்க பலரும் முன் வந்துள்ளார்களாம். ஆனால், 'ஈட்டி' படத்தை விட இந்தப் படம் அதிகம் வசூலிக்க வாய்ப்புள்ளதாக தயாரிப்பாளர் தாணு தரப்பிலிருந்து சொல்கிறார்களாம். அதனால் 'கணிதன்' படத்தின் வியாபாரக் கணக்கு, அதர்வா நடித்து இதற்கு முன் வெளிவந்த படங்களைவிட அதிகமாகவே இருக்கும் என்கிறார்கள்.
இந்த மாதத்தில் வெளிவர உள்ள படங்களில் 'மிருதன், கணிதன்' இரண்டு படங்கள்தான் அதிகமான எதிர்பார்ப்பில் உள்ளதாக வியாபார வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.