'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நான் ஈ, வெப்பம் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ள நடிகர் நானி தற்போது டோலிவுட்டில் முன்னணி நடிகராக வளர்ந்து வருகின்றார். பலே பலே மகாதேவோ படத்தின் வெற்றிக்கு பின்னர், கிருஷ்ணகாடி வீர ப்ரேம கதா எனும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு முன்னர் இயக்குனர் மணிரத்னம் இயக்கும் படத்தில் நானி நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இடையில் அப்படம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வரவுள்ள கிருஷ்ணகாடி வீர ப்ரேம கதா படத்தின் புரமோஷனில் கலந்து கொண்ட நானி, இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தான் நடிக்கவிருந்த படம் கைவிடப்பட்டதற்கான காரணத்தை கூறியுள்ளார்.
மணிரத்னம் தயார் செய்து வைத்த கதையைச் சார்ந்து பாலிவுட்டில் ஒரு படம் வெளியிடப்பட்டதாலும், அப்படத்திற்கும் மணிரத்னம் படத்திற்கும் அதிக ஒற்றுமைகள் இருந்ததாலும் அப்படத்தை மணிரத்னம் கைவிட்டதாக நாணி கூறியுள்ளார். ஓகே கண்மணி படத்தின் தெலுங்கு மொழிமாற்றத்தில் துல்கருக்கு குரல் கொடுத்த நானி, விரைவில் மணிரத்னம் இயக்கத்திலும் நடிப்பேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.