ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சினிமாவில் நயன்தாராவுக்கு பிறகு காதல் வலையில் அதிகம் விழுந்தவர் த்ரிஷா. சில விஷயங்கள் வெளியில் தெரியும். பல விஷயங்கள் தெரியாது. ஒரு காதல் திருமண நிச்சயதார்த்தம் வரை சென்று பின்பு தடைபட்டது அனைவருக்கும் தெரியும். 30 வயதை தாண்டிவிட்ட த்ரிஷா இனி காதலிக்கப்போவதில்லை. அம்மா பார்க்கும் மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்ட முடிவு செய்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:
என் அம்மாவை விட இந்த உலகில் யார் என் மீது அன்பு செலுத்த முடியும். இத்தனை ஆண்டுகள் சினிமாவில் தாக்குபிடித்து நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் என் அம்மாதான். கதை தேர்வில் நான் திணறினாலோ, அல்லது நடிப்பதா, வேண்டாமா என்ற குழப்பம் ஏற்பட்டாலோ என் அம்மாதான் அதற்கான தீர்வை சொல்வார். அதனால்தான் நிலைத்து நிற்கிறேன்.
எனது தனிப்பட்ட விஷயங்களிலும் அம்மாதான் முடிவெடுப்பார். எனது திருமணம் பற்றி மற்றவர்கள் கவலைப்படுவது ஆச்சர்யமாக இருக்கிறது. நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை.
முன்பை விட இப்போதுதான் சினிமாவில் அதிக கவனம் செலுத்துகிறேன். இதுவரை கமர்ஷியல் ஹீரோயினாகவே இருந்துவிட்டேன். இனி நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து வித்தியாசமாக நடிக்க முடிவு செய்திருக்கிறேன். அதனால் தான் அரண்மணை படத்தில் பேயாக நடித்தேன். கொடி படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கிறேன். நாயகி படத்தில் 80களின் நடிகையாக நடிக்கிறேன். போகி படத்தில் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறேன். சினிமாவை நான் பார்த்துக்கொள்வேன். என் திருமண விஷயத்தை அம்மா பார்த்துக்கொள்வார். எனக்கு மாப்பிள்ளை பார்க்கும் பொறுப்பை அம்மா பார்த்துக்கொள்வார் என்கிறார் த்ரிஷா.