டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ராதாமோகன் இயக்கத்தில் நடித்த உப்புக்கருவாடு படத்திற்கு பிறகு இடம் பொருள் ஏவல், அஞ்சல, உள்குத்து, காத்திருப்போர் பட்டியல், நெஞ்சம் மறப்பதில்லை என பல படங்களில் நடித்து வருகிறார் நந்திதா. இதில் விமலுடன் அவர் நடித்துள்ள அஞ்சல படம் வருகிற வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது. முன்னதாக, நேற்று இரவு 7 மணி அளவில் அந்த படத்தின் பத்திரிகையாளர் காட்சி சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள போர்பிரேம் பிரிவியூ தியேட்டர் திரையிடப்பட்டது.
அப்போது, கடைசி வரிசையில் உள்ள ஒரு நான்கு இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டிருப்பதாக ஒரு அட்டை வைக்கப்பட்டிருந்தது. பெரும்பாலும் பத்திரிகையாளர் காட்சியில் இதுபோன்ற முன்பதிவு அட்டைகள் வைக்கப்படு வதில்லை என்பதால், அப்படி யார் வரப்போகிறார்கள் என்று நிருபர்கள் பேசிக்கொண்டிருக்கையில் திடீரென்று சர்ப்ரைஸாக நந்திதா தனது குடும்பத்தாருடன் என்ட்ரி கொடுத்து அந்த இருக்கைகளில் அமர்ந்தார்.
மேலும், படம் பார்த்தபோது எந்தவித ரியாக்சனும் இல்லாமல் ரசித்துக்கொண்டிருந்த நந்திதா, படம் பார்த்த நிருபர்களிடமும் படம் பற்றிய கருத்து எதுவும் கேட்கவில்லை. அதோடு, படம் முடிந்து கடைசியில் டைட்டீல் ஓடிக்கொண்டி ருப்பதுவரை ஸ்கிரீனையே கண்ணும் கருத்துமாக பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தார்.