அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |
ரஜினி நடித்த லிங்கா' படத்துக்கு ஏற்பட்ட தோல்வியை விட அதனால் எழுந்த பிரச்னைகள் காரணமாக இனி தமிழ்ப்படமே வேண்டாம் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டார் கே.எஸ்.ரவிக்குமார். அதன் பிறகு சற்றே மீண்ட அவர் தற்போது சுதீப் நடிக்கும் கன்னடப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் 'முடிஞ்சா இவனப் புடி' என்ற பெயரில் தமிழில் வெளியாகிறது. சுதீப்புக்கு ஜோடியாக நித்யா மேனன் இப்படதில் நடிக்கிறார்.
'லிங்கா' படத்தை தயாரித்த ராக்லைன் வெங்கடேஷும், எம்.பி.பாபு இருவரும் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமிழ், கன்னடம் என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ள இப்படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார். ராஜரத்தினம் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தை வருகிற ஏப்ரல் 8-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'தெறி' படம் ஏப்ரல் 14-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. இதனால் 'தெறி'க்கு முன்பாக 'முடிஞ்சா இவனைப் புடி' படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கே.எஸ்.ரவிகுமார் விரும்புகிறாராம். எனவே இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை மிக விரைவில் வெளியிடவிருக்கிறார்கள்.