துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
தமிழில் ஜோதிகாவிற்கு ரீ என்ட்ரி கொடுக்கும் விதமாக '36 வயதினிலே' படத்தை இயக்கி வெற்றியை ருசித்த கையோடு மீண்டும் மலையாள திரையுலகிற்கே திரும்பிவிட்டார் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ்.. அடுத்ததாக அவர் பிருத்விராஜ் அல்லது மோகன்லால் படத்தை இயக்கப்போவதாகத்தான் இதுநாள் வரை செய்திகள் வெளியாகி வந்தன. அவரும் இந்த இருவருக்குமான கதைகளை தயாராக வைத்திருந்தாலும், அவர் தமிழுக்கு வந்துசென்ற அந்த இடைப்பட்ட காலத்தில் வேறு சில இயக்குனர்களின் படங்களில் இந்த இரண்டு நடிகர்களும் தொடர்ந்து கமிட்டாகி நடித்து வருகின்றனர். அதனால் இந்த இருவரையும் இயக்கும் திட்டத்தை ஒத்திவைத்துவிட்டு புதிய கதையை கையில் எடுத்துள்ளார் ரோஷன் ஆண்ட்ரூஸ்...
ரோஷனின் ஆஸ்தான கதாசிரியர்களான பாபி-சஞ்சய் இரட்டையர்தான் இந்தப்படத்திற்கும் கதை எழுதுகிறார்கள். படத்திற்கு 'ஸ்கூல் பஸ்' என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் கதாநாயகனாக, அவரது முந்தைய படமான ''ஹவ் ஓல்டு ஆர் யூ' ஹீரோ குஞ்சாக்கோ போபனே நடிக்கிறார். இதில் அவருக்கு ஸ்கூல் பஸ் ட்ரைவர் வேடமாம்.. தனியார் பள்ளியில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பாகவும் இன்றைய கல்விமுறையின் அவலத்தை தோலுரிப்பதாகவும் கமர்ஷியல் பாணியில் இந்தப்படம் உருவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. படம் ஹிட்டாச்சு என்றால் ரோஷன் ஆண்ட்ரூஸ் இதை தமிழுக்கும் கொண்டுவருவார் என நம்புவோம்.