'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நீ வருவாய் என, விண்ணுக்கும் மண்ணுக்கும், காதலுடன், திருமதி தமிழ் ஆகிய படங்களை இயக்கியவர் ராஜகுமாரன். நடிகை தேவயானியின் கணவரான இவர், திருமதி தமிழ் படத்தில் நாயகனாகவும் நடித்தார். பின்னர் சந்தானம் நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் காமெடியனாக நடித்தார். அதைத் தொடர்ந்து இப்போது கோலிசோடா விஜய் மில்டன் இயக்கும் படத்தில் நாயகனாக நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்தில் பரத் வில்லனாக நடிக்கிறார்.
இந்நிலையில், ராஜகுமாரனை தொடர்பு கொண்டு விஜய்மில்டன் படத்தில் எந்த மாதிரியான ஹீரோவாக நடிக்கிறீர்கள்? என்று கேட்டால், விஜய் மில்டன் படத்தில் நான் ஹீரோவாக நடிக்கிறேன். மற்றபடி அது எந்த மாதிரியான ரோல், எந்தமாதிரியான படம் என்பது பற்றி என்னிடம் எதுவும் கேட்காதீர்கள். எதுவாக இருந்தாலும் டைரக்டரைக் கேட்டுக்கொள்ளுங்கள் என்கிறார்.
மேலும், நான் டைரக்சன் பண்ணும் படமாக இருந்தால் தைரியமாக சொல்லி விடுவேன். ஆனால் இது நான் நடிக்கிற படம். அதனால் அதைப்பற்றி நான் எதுவும் சொல்லக்கூடாது. சொன்னால் தவறாகி விடும் என்கிறார். அவரிடத்தில், டி.ராஜேந்தர் நடிக்கயிருந்த வேடத்தில் இப்போது நீங்கள் நடிப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்றதற்கு, டி.ஆர் நடிக்கயிருந்த விசயமே நீங்கள் சொல்லித்தான் எனக்கே தெரிகிறது என்கிறார் ராஜகுமாரன்.