தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கத்தி படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்தவர் அனுகிருஷ்ணா. இவர் இளைஞர் பாசறை, வெள்ளக் காக்கா மஞ்சக்குருவி உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார். அதோடு, தற்போது இளமி என்ற படத்தில் லீடு ரோலில் நடித்துள்ளார். சாட்டை யுவன் நாயகனாக நடித்துள்ள இந்த படம் 18-ம் நூற்றாண்டு கதையில் உருவாகியுள்ளது. இதையடுத்து ஏழாம் உயிர் என்ற படத்தில் தற்போது பேய் வேடத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் அனுகிருஷ்ணா.
இந்த படத்தில் பேயாக நடித்த அனுபவம் குறித்து அவர் கூறும்போது, சின்ன வயதில் இருந்தே பேய் என்றால் நான் ரொம்ப பயப்படுவேன். ஆனால் இதுவரை பேயை பார்த்ததில்லை. மேலும், படங்களில் பேய் வேடத்தில் ஆவேசமாக நடிப்பதைப்பார்த்தாலே பயத்தில் கண்களை மூடிக்கொள்வேன். அப்படிப்பட்ட என்னை இந்த படத்தில் பேய் வேடத்திலேயே நடிக்க வேண்டும் என்று சொன்னபோது ஒருகணம் ஆடிப்போய் விட்டேன். பேய் என்றாலே பதறிப்போகும் நான் பேயாக நடிப்பதா? என்று அந்த அதிர்ச்சியில் இருந்து நான் மீளவே சிறிது நேரம் ஆனது.
ஒருவழியாக நடித்துத்தான் பார்ப்போமே என்று பேய் பேடத்தில் நடிக்க தயாரானேன். பிசாசு படத்தில் பிரயகா நடித்தது போன்ற பேய் வேடத்தில் இந்த ஏழாம் உயிர் படத்தில் எனது கெட்டப்பை மாற்றி நடிக்க வைத்துள்ளனர். அப்போது நான் அந்த கெட்டப்பில் இருப்பதை யூனிட்டில் இருந்த ஒரு சின்ன பெண் பயந்து கொண்டு ஓடினாள். அதன்பிறகுதான் இந்த கேரக்டர் கண்டிப்பாக ரசிகர்களை பெரிய அளவில் பயமுறுத்தும் என்கிற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. அதோடு, முதலில் பேய் வேடத்தில் நடித்தபோது எனக்குள்ளேயே பயந்தபடி நடித்த நான், என்னைப்பார்த்து மற்றவர்கள் பயப்படுவதைப்பார்த்து சந்தோசமடைந்தேன். அதனால் இன்னும் மிரட்டலான பேய் வேடங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்கிற ஆசையும் இப்போது எனக்கு ஏற்பட்டுள்ளது என்கிறார் அனுகிருஷ்ணா.