கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
விஜய் தற்போது 'தெறி' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் டீசர் கடந்த வாரம் வெளிவந்து பல புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. வரும் கோடை விடுமுறைக்கு இந்தப் படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தையடுத்து 'அழகிய தமிழ் மகன்' படத்தை இயக்கிய பரதன் இயக்கத்தில், விஜய் நடிக்க உள்ளார். இந்தப் படம் மே மாதம் முதல் ஆரம்பமாக உள்ளது. தற்போது படத்தின் முன் படப்பிடிப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இந்தப் படத்திற்காக விஜய் ஜோடியாக நடிக்க 'ரஜினி முருகன்' படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தின் வெற்றி கீர்த்தி சுரேஷுக்கு தமிழ்த் திரையுலகில் ஒரு வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்தியிருக்கிறது. சின்னச் சின்ன க்யுட் எக்ஸ்பிரஷன்களில் ரசிகர்களையும் கவர்ந்துவிட்டார். அதோடு, தமிழும் நன்றாகப் பேசத் தெரிந்தவர் என்பதால் விஜய் படத்தின் நாயகி கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று ஒப்பந்தம் செய்துள்ளார்களாம்.
தற்போது நான்கைந்து படங்களில் நாயகியாக நடித்து வரும் கீர்த்திக்கு 'ரஜினி முருகன்' படத்தின் வெற்றி மிகப் பெரிய ஜாக்பாட்டைத் தேடிக் கொடுத்திருக்கிறது. இந்தப் படத்திற்காக அவருக்கு அதிக சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
கீர்த்தி, தனுஷ் ஜோடியாக நடித்துள்ள பிரபு சாலமன் இயக்கியுள்ள படம் அவருடைய அடுத்த வெளியீடாக வர உள்ளது.