ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
டூரிங் டாக்கிஸ் படத்தை அடுத்து டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நாயகனாக நடித்துள்ள படம் நய்யப்புடை. கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த படத்தை விஜயகிரண் இயக்கியுள்ளார். இதில் எஸ்.ஏ.சியுடன் பா.விஜய், சாந்தினி, நான் கடவுள் ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் சமுதாயத்தில் மன்னிக்க முடியாத தவறு செய்பவர்களை தேடிச்சென்று நய்யப் புடைப்பதுதான் எஸ்.ஏ.சியின் வேலையாம். அதனால் படம் முழுக்க துப்பாக்கியும் கையுமாக நடித்திருக்கும் அவர், ஆக்சன் காட்சியிலும் நடித்துள்ளார்.
இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில், நய்யப்புடை படத்தை பிப்ரவரி 19-ந்தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் நேற்று முன்தினம் டைரக்டர்கள் கே.எஸ்.ரவிக் குமார், ராஜேஷ்.எம் உள்பட பல திரையுலகினர் நய்யப்புடை படம் பார்த்துள் ளனர். அப்போது படம் நன்றாக இருக்கிறது. ஆனால், 2.05 நிமிடம் இருக்கும் படத்தை இன்னும் 10 நிமிடம் கம்மி பண்ணலாம் என்று கருத்து சொன்ன அவர்கள், முன்னணி நடிகர்களின் படங்கள் வரும்போது படத்தை ரிலீஸ் பண்ண வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்களாம்.
அதனால் இப்போது நய்யப்புடை படத்தின் நீளத்தை குறைக்க முடிவு செய்துள்ள நிலையில், தயாரிப்பாளர் தாணு, எஸ்.ஏ.சி இருவரும் கலந்து பேசி பிப்ரவரியில் படத்தை வெளியிடாமல், மார்ச் 4-ந்தேதி வெளியிடலாம் என்று முடிவு செய்திருக்கிறார்களாம். காரணம் அன்றைய தினம் படங்கள் எதுவும் வெளியாகவில்லையாம். ஆக, மார்ச் 4-ந்தேதி சிங்கிளாக நய்யப்புடைக்க வருகிறாராம் எஸ்.ஏ.சந்திரசேகரன்.