ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கௌதம் மேனன் முன்னைவிட தற்போது சுறுசுறுப்பாகிவிட்டார். தற்போது அச்சம் என்பது மடமையடா படத்தை இயக்கி வரும் கௌதம் மேனன் அடுத்து ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கவிருக்கிறார். அதில் ஒரு படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்கிறார். கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இன்னொரு படத்திற்கான ஹீரோவாக தனுஷ் நடிப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது!
கௌதமுடன் முதல்முறையாக தனுஷ் இணையவிருக்கும் இப்படத்திற்கு 'என்மேல் பாயும் தோட்டா' என்ற தலைப்பை சூட்ட இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, கௌதம் மேனன் தயாரித்த நீ தானே பொன் வசந்தம் உட்பட பல படங்கள் தோல்வியடைந்ததால் தயாரிப்பாளராக கடும் பண நெருக்கடியில் இருந்து வந்தார் கௌதம் மேனன். அதன் காரணமாகவே ஏம்.எம்.ரத்னத்துக்கு 'என்னை அறிந்தால்' படத்தை இயக்கினார்.
இந்நிலையில், லைகா புரடக்ஷன்ஸ் நிறுவனம் தான் கௌதம் மேனனுக்கு பெரும் தொகையை பைனான்ஸாக கொடுத்துள்ளதாம். அந்தப் பணத்தை வைத்தே ஜெயம் ரவி, தனுஷ் ஆகியோருக்கு பெரும் சம்பளம் கொடுத்து அவர்களை கமிட் பண்ணியுள்ளாராம் கௌதம் என கோலிவுட்டில் பேசிக்கொள்கிறார்கள்.