வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் |
ரஜினி முருகன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு பத்திரிகையாளர்களின் தொடர்பு எல்லைக்குள் சிவகார்த்திகேயன் வருவதில்லையாம். அது கூடப் பரவாயில்லை, அவரை வைத்து படத்தைத் தயாரித்த லிங்குசாமியின் தொடர்பு எல்லைக்குள் கூட அவர் வருவதில்லையாம். 'ரஜினி முருகன்' படத்தின் வெற்றிக்கு மீடியாக்களும் ஒரு முக்கிய காரணம். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தங்களது படத்திற்கு வெற்றி கிடைக்க காரணமாக இருந்த பத்திரிகையளார்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்க ஆசைப்பட்டாராம் லிங்குசாமி.
ஆனால், சிவகார்த்திகேயனைத் தொடர்பு கொண்டு பேசிய போது அதற்கெல்லாம் வர முடியாது என மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. பட வெளியீடு தொடர்பாக ஏற்கெனவே இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்ல கடைசி நேரத்தில் சிவகார்த்திகேயனிடம் இருந்தும் சில பல கோடிகளை வாங்கித்தான் படத்தை வெளியிட்டுள்ளார்கள். படம் வெளியான அன்று சில பத்திரிகையாளர்களிடம் மட்டும் சிவகார்த்தியேன் இந்தப் படத்தில் என்னுடைய சம்பளம் மைனஸ் 50 லட்சம் என்று மட்டும் சொல்லியிருக்கிறார்.
படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் இல்லாமல் பத்திரிகையாளர்களைச் சந்தித்து எப்படி நன்றி சொல்வது என்று அந்த திட்டத்தையே கைவிட்டு விட்டாராம் லிங்குசாமி. பட வெளியீட்டிற்கு முன் மோதிக் கொள்பவர்கள், படம் வெற்றியடைந்ததும் நண்பர்களாகிவிடுவதுதான் சினிமாவில் வழக்கம். ஆனால், லிங்குசாமி - சிவகார்த்திகேயன் விவகாரத்தில் எந்த சாமி வந்தாலும் ஒன்றும் நடக்காது என்கிறார்கள். 'ரஜினி முருகன்' வெற்றியை சிவகார்த்திகேயன் இதயத்தில் வைத்துக் கொள்வதுதான் நல்லது, அதையே தலையில் ஏற்றிக் கொண்டால் என்ன ஆவது என்று கோலிவுட்டில் சிலர் புகைகிறார்களாம்.