‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
ஜீவா தனி கதாநாயகனாக நடித்த திருநாள் படம் முடிவடைந்து மாதக்கணக்காகிறது. அந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகி. அப்படி இருந்தும் திருநாள் படத்தை வெயிட்டிங் லிஸ்ட்டில் வைத்துவிட்டு, தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும் படத்தின் இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் உருவாகி இருக்கும் போக்கிரி ராஜா படத்தை முதலில் வெளியிட வேண்டும் விரும்புகிறார் ஜீவா.
போக்கிரி ராஜா படம் பிப்ரவரி 26 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தனைக்கும் போக்கிரி ராஜா படத்தில் ஜீவா தனி கதாநாயகன் இல்லை. இப்படத்தில் சிபிராஜ் வில்லனாக இருந்தாலும் கதாநாயகனுக்குரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதால், இன்னொரு கதாநாயகனாகவே சிபி ராஜ் நடித்திருக்கிறார். அப்படி இருந்தும் போக்கிரி ராஜா படத்தை முதலில் வெளியிட வேண்டும் என்று ஜீவா நினைக்க என்ன காரணம்? போக்கிரி ராஜா நிச்சயம் வெற்றியடையும் என்று நம்புகிறார் ஜீவா.
சிபிராஜ் நடித்த நாய்கள் ஜாக்கிரதை மிகப்பெரிய வெற்றியடைந்ததினால் இந்தப்படத்துக்கு நல்ல ஓப்பனிங் கிடைக்கும், அதனால் படத்துக்கு வசூலும் அதிகரிக்கும் என்பது ஜீவாவின் எண்ணம். போக்கிரி ராஜா படம் பெரிய அளவில் வசூல் செய்தால் அதை வைத்து திருநாள் படத்தை பெரிய தொகைக்கு பிசினஸ் பண்ணிவிடலாம் என்று கணக்குப்போடுகிறார் ஜீவா.