தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி |
தென்னிந்திய நடிகர் சங்க கட்டடம் தொடர்பாக எஸ்பிஐ., சினிமாஸ் உடனான ஒப்பந்தம் ஏற்கனவே ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று(பிப்,8ம் தேதி)முறைப்படி அது ரத்து செய்யப்பட்டது.
நடிகர் சங்க கட்டடம் தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பூதாகரமான பிரச்னை வெடித்தது. நடிகர் சங்க கட்டடம் தொடர்பாக சரத்குமார் மற்றும் ராதாரவி முறைகேடு செய்துள்ளதாக விஷால் அணி சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வந்த இந்த பிரச்னை, நடிகர் சங்க தேர்தலால் உச்சக்கட்டத்தை எட்டியது. சரத்குமார் தலைமையிலான ஒரு அணியும், நாசர் தலைமையிலான ஒரு அணியும் களத்தில் இறங்கி போட்டியிட்டனர். ஒருமாத காலமாக அரசியல் கட்சிகளின் தேர்தலை விட நடிகர் சங்க தேர்தல் களம் சூடுபிடித்திருந்தது. தேர்தலில் விஷால் அணியினர் அமோக வெற்றி பெற்றனர். சங்கத்தில் புதிய அணியினர் பொறுப்பேற்ற பின்னர் பல முக்கியமான விஷயங்கள், முடிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தச்சூழலில், தேர்தலில் விஷால் அணியினர் வெற்றி பெற்றதை தொடர்ந்து, எஸ்பிஐ., சினிமாஸ் உடனான ஒப்பந்தத்தை தேர்தலுக்கு முன்பாகவே (செப்., 29ம் தேதி) ரத்து செய்துவிட்டேன் என சரத்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். அதோடு அதற்கான ஆவணங்களையும் புதிய நிர்வாகிகளிடம் வழங்கினார் சரத்குமார்.
இந்நிலையில் முறைப்படி இந்த ஒப்பந்தம் இன்று ரத்து செய்யப்பட்டது. நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, செயற்குழு உறுப்பினர் பூச்சி முருகன் தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி, நடிகர் சங்க நிலத்தை மீட்க முடியுமா என்று கேட்டார்கள், நாங்கள் தேர்தலில் சொன்னது போன்று இப்போது சங்க நிலத்தை மீட்டுள்ளோம். எஸ்பிஐ., சினிமாஸ் உடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுவிட்டது. கட்டடம் கட்ட எஸ்பிஐ., சினிமாஸ் கொடுத்த பணத்தை வட்டியுடன் சேர்த்து ரூ.2.48 கோடி தர முடிவு செய்யப்பட்டது. இந்த கடனை விரைவில் அடைத்துவிடுவோம். இனி இந்த நிலம் நடிகர் சங்கத்திற்கு சொந்தமானது. இந்தநாள் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு முக்கியமான நாள் என்று கூறியுள்ளார்.