திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
கண்ணம்மா சீரியலில் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன். டைட்டீல் ரோல் என்பதால் அதன் பொறுப்பை உணர்ந்து நடிக்கிறேன். இந்த தொடர் பெரிய அளவில் ரீச்சாகி வருவது எனக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது என்கிறார் நடிகை சோனியா.
மேலும் அவர் கூறும்போது, 1984ல் வெளியான மைடியர் குட்டிச்சாத்தான் படத்தில் நடித்து சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்ற நான், அதன்பிறகு 1987ல் நொம்பாரதி பூவு என்ற மலையாள படத்துக்காக கேரள அரசு விருது பெற்றேன். இப்படித்தான் எனது நடிப்பு பயணம் தொடங்கியது. அதையடுத்து தமிழ், மலையாளத்தில் ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தேன்.
பின்னர் காமெடி மற்றும் குணசித்ர வேடங்களில் இப்போதுவரை நடித்து வருகிறேன். அதோடு, சின்னத்திரையிலும் செல்லமே, மைநேம் இஸ் மங்கம்மா, மாதவி, முகூர்த்தம் உள்பட சில தொடர்களில் நடித்தேன். இப்போது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணம்மா தொடரில் நடித்து வருகிறேன். குடும்பத்தலைவி வேடம். கணவன், குழந்தைகள் என வாழ்ந்து வரும் நான், பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கிறேன் என்பதுதான் இந்த சீரியல்.
அதனால் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. குறிப்பாக என்னுடைய போராட்டங்களைப் பார்த்து பெண்கள் கண்கலங்குகிறார்கள். அதனால் இதற்கு முன்பு நான் நடித்த சீரியல்களை விட இந்த கண்ணம்மா தொடர் எனக்கு பெரிய ரீச் கொடுத்துள்ளது. டைட்டீல் ரோல் என்பதால் இப்போது எனது முழுக்கவன மும் இந்த சீரியலில்தான் உள்ளது என்கிறார் சோனியா.