டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நேரம், ஜிகர்தண்டா படங்களில் வில்லனாக நடித்தவர் பாபி சிம்ஹா. அந்த இரண்டு படங்களுமே வெற்றி பெற்றதோடு பாபி சிம்ஹாவின் நடிப்பும் பேசப்பட்டது. இதில் ஜிகர்தண்டாவுக்காக சிறந்த வில்லனுக்கான தேசிய விருதும் பெற்றார். ஆனபோதும், அதையடுத்து அவர் வில்லன் பயணத்தை தொடரவில்லை. உடனடியாக ஹீரோவாகி விட்டார். ரசிகர்கள் தன்னை வில்லனாகத்தான் அங்கீகரித்தார்கள் என்றபோதும், ஹீரோ ஆசையில் பல படங்களில் கமிட்டாகி நடித்துக்கொண்டிருக்கிறார்.
ஆனால் அப்படி அவர் நாயகனாக நடித்து வெளியான மசாலாப்படம், உறுமீன், பெங்களூர் நாட்கள் என பல படங்கள் வெளியாகி விட்டன. ஆனால் எந்த படத்திலும் அவரது நடிப்பு பெரிதாக பேசப்படவில்லை. இதையடுத்து பாபி சிம்ஹாவின் அபிமானிகள், உங்களுக்கு பாசிட்டீவை விட நெகடீவ் ரோல்கள்தான் நன்றாக ஒர்க்அவுட்டாகிறது. அதனால், ஹீரோவாக நடித்தாலும் நெகடீவ் கலந்த கதைகளில் நடியுங்கள் என்று கேட்டுக்கொள்கிறார்களாம்.
இதுவரை அப்படி நடிப்பது பற்றி யோசிக்காத பாபி சிம்ஹா, இப்போது நெகடீவ் ரோலில் தான் நடித்து பேசப்பட்ட படங்களை அசைபோட்டு பார்த்துக்கொண்டி ருக்கிறாராம். ஆக, விரைவில் பாபி சிம்ஹாவை அதிரடி ஹீரோவாக திரையில் பார்க்கலாம் என்று தெரிகிறது.