'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
கடந்த வருடம் மலையாளத்தில் பிருத்விராஜ்-பார்வதி நடிப்பில் வெளியான 'என்னு நிண்டே மொய்தீன்' 150வது நாளை கடந்து இன்னும் சில தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருக்கிறது என்றால் இதுதானே மலையாள சினிமாவுக்கு உற்சாக டானிக்காக இருக்க முடியும். கேரள மக்கள் அனைவருமே அறிந்த பிரபலமான இருவரின் (காஞ்சனமாலா - மொய்தீன்) காதலை எந்த வித மிகைப்பூச்சும் இல்லாமல் உள்ளது உள்ளபடி சொன்னதுதான் இவ்வளவு பெரிய வெற்றிக்கு முதல் படி.. இயக்குனர் ஆர்.எஸ்.விமல் இந்தப்படத்திற்காக ஏழு வருடங்கள் தன்னை வருத்திக்கொண்டு தந்த கடின உழைப்பு இரண்டாவது படி..
மொய்தீன்-காஞ்சனமாலாவாக திரையில் தோன்றி ரசிகர்களை கட்டிப்போட்ட பிருத்விராஜ்-பார்வதியின் அபார நடிப்பு வெற்றிக்கான மூன்றாவது படியாக அமைந்தது. இந்தப்படத்தின் 150வது நாள் வெற்றிவிழாவை கொச்சியில் உள்ள கோகுலம் டவரில் வைத்து கொண்டாடி படக்குழுவினர் அனைவருக்கும் 150வது நாள் ஷீல்டு வழங்கி கௌரவித்துள்ளனர். இந்த விழாவில் பிருத்விராஜ்-பார்வதி, படத்தின் இயக்குனர் ஆர்.எஸ்.விமல் மற்றும் படக்குழுவினர், திரையுலக வி.ஐ.பிகள் பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.