ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் |
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசின் அண்ணன் மகன் திலீபன் வத்திக்குச்சி படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது அவர் நடித்து வரும் இரண்டாவது படம் குத்தூசி. அவருக்கு ஜோடியாக புதுமுகம் அமலா அறிமுகமாகிறார். வ.ஜ.ச.ஜெயபாலன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். சீனு ராமசாமியின் உதவியாளர் சிவசக்தி இயக்குகிறார். இது விவசாயத்தை மையப்படுத்தும் கதை என்கிறார் சிவசக்தி. மேலும் அவர் கூறியதாவது: நாம் படிக்கவில்லை நம்பிள்ளைகளாது படிக்கட்டும் என்று நமக்கு முந்தைய தலைமுறை தனது வாரிசுகளை விவசாயத்தை விட்டு விரட்டி விட்டது. இப்போது விவசாயம் செய்ய ஆளும் இல்லை, நிலமும் இல்லை. இந்த பிரச்சினை பற்றி பேசும் படம், ஹீரோவின் அப்பா தன் மகனை படிக்க வைத்து வெளிநாட்டுக்கு அனுப்ப தனது நிலத்தை வெளிநாட்டு கம்பெனிக்கு விற்க ஏற்பாடு செய்கிறார். இந்த நிலையில் அவர் இறந்துவிட ஹீரோவுக்கு இடத்தை விற்று விட்டு வெளிநாடு செல்லவிருப்பம் இல்லை. விற்க மறுக்கிறார். அப்போது தான் வெளிநாட்டு நிறுவனத்தின் சதிவேலைகள் தெரிகிறது. அந்த நிறுவனத்திடமிருந்து ஊரையும், நிலத்தையும், மக்களையும எப்படி ஹீரோ காப்பாற்றுகிறார் என்பது தான் கதை.
காதல், காமெடி, குடும்ப செண்டிமெண்ட் கலந்து ஒரு கமர்ஷியல் படமாக உருவாகி இருந்தாலும் சமூத்துக்கு தேவையான மெசேஜோடு உருவாக்கியிருக்கிறோம் என்கிறார் இயக்குனர் சிவசக்தி.