'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? |
நடிகை ஹூமா குரேஷியும், சோகைல் கானும் நெருங்கி பழகி வருவதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாகின. இந்த கிசுகிசுக்கள், குடும்பத்தின் மீது மிகுந்த பாசம் கொண்டவரான சல்மான் கானை ரொம்பவே அப்செட் செய்து விட்டதாம். இதன் காரணமாக, டிசம்பர் மாதம் பன்வல் பண்ணை வீட்டில் நடந்த சல்மான் கானின் 50வது பிறந்தநாள் விழாவிற்கு வந்த ஹூமாவிடம் சல்மான் முகம் கொடுத்துக் கூட பேசவில்லையாம். அவரிடம் இருந்து விலகியே இருந்தாராம். சல்மான், ஹூமாவை ஒதுக்கியது விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றாகவே தெரிந்ததாம். வெளி நபர்களால் தங்கள் குடும்பத்தில் விரிசல் வருவதை சல்மான் பொறுத்துக் கொள்ள விரும்பாததால் தான் இந்த கோபமாம். ஆனால் சோகைல் உடன் கிசுகிசுக்கபட்டதும் அது பற்றி ஹூமாவிடம் கேட்ட போது, சோகைல் எனக்கு பெரிய அண்ணன் போன்றவர் என கூறி அதற்கு முற்றிப்புள்ளி வைத்து விட்டார். இருந்தும் ஹூமா மீது சல்மானின் கோபம் குறையவில்லையாம்.