பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கே.பாக்யராஜ் இயக்கிய சித்து ப்ளஸ்-2 படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக நடித்தவர் சாந்தினி. அதன்பிறகு நகுல் நடித்த நான் ராஜாவாகப்போகிறேன் என்ற படத்தில் நடித்த சாந்தினிக்கு பின்னர் தமிழில் எதிர்பார்த்தபடி படங்கள் இல்லை. அதனால் தெலுங்கு சினிமாவுக்கு சென்று சில படங்களில் நடித்தவர் தற்போது தமிழில் ஒரே நேரத்தில் நான்கு படங்களில் நடித்து வருகிறார்.
இதுபற்றி சாந்தினி கூறுகையில், சென்னை பெண்ணான எனக்கு தமிழில் முன்னணி நடிகையாக வேண்டும் என்பதுதான் ஆசை. அதனால் பிரபல இயக்குனர் கே.பாக்யராஜின் இயக்கத்தில் எனக்கு முதல் பட வாய்ப்பு கிடைத்த போது சந்தோசமடைந்தேன். அந்த படம் எதிர்பார்த்தபடி போகவில்லை என்றபோதும், பாக்யராஜின் அறிமுகம் என்கிற பெருமை எனக்கு உள்ளது.
அதோடு, சினிமாவில் உடம்பைக்காட்டி நடிப்பதை விட திறமையைக்காட்டி நடிக்க வேண்டும் என்ற கொள்கையுடன்தான் நான் நடிக்க வந்தேன். அதனால்தான் இப்போதுவரை நான் கிளாமர் விசயத்தில் விட்டுக்கொடுக்காமல் இருக்கிறேன். அதற்காக மாடர்னாக நடிக்க மறுக்கவில்லை. பாடல் காட்சிகளில் மிதமான கிளாமர் காட்டி நடிக்கத்தான் செய்கிறேன். ஆனால் ஒருபோதும் ஓவர் கிளாமர் காட்ட மாட்டேன். மேலும், இப்போதைய ரசிகர்கள் கிளாமராக நடிப்பவர் களை விட நல்ல பர்பாமென்ஸ் நடிகைகளைத்தான் ரசிக்கிறார்கள். அதனால் எனது கவர்ச்சி கொள்கையில் உறுதியாக இருந்து எப்போதும் லிமிட் தாண்டாமல் நடிப்பேன் என்கிறார் சாந்தினி.