தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஓ காதல் கண்மணி படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படத்தில் கார்த்தி, பிரேமம் புகழ் சாய் பல்லவி இருவரும் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக திரைத்துறையில் தகவல் அடிபடுகிறது. ஓ காதல் கண்மணி படத்தின் வெற்றிக்குப் பிறகு கூடுதல் கவனத்துடன் அடுத்த படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் இயக்குநர் மணிரத்னம்.
கார்த்தி, துல்கர் சல்மான் இருவரும் இணைந்து நடிக்க டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டில் புதிய படத்தை மணிரத்னம் தொடங்க திட்டமிட்டு இருந்தார். அந்தக்கதையைக் கேட்டுவிட்டு கார்த்தி, துல்கர் இருவரும் நடிக்கத் தயாராக இருந்தனர். ஆனால் இருவரது தேதிகளும் சரியாக அமையவில்லை. எனவே அந்தப்படத்தை இயக்கும் எண்ணத்தையே ஒத்தி வைத்தார் மணிரத்னம்.
அதன் பிறகு கார்த்தி மட்டும் ஸோலோ ஹீரோவாக நடிக்கும் கதையை எழுத ஆரம்பித்தார். தற்போது கார்த்தி நடிக்கும் புதிய படத்திற்கான கதையை எழுதி முடித்துவிட்டார் மணிரத்னம். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் துவங்கவிருப்பதாக தகவல் அடிபடுகிறது.
நாகார்ஜுனா உடன் நடிக்கும் தெலுங்குப் (தமிழில் தோழா) படத்தின் படப்பிடிப்பு முடிவுற்றதைத் தொடர்ந்து, தற்போது காஷ்மோரா படத்தில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் கார்த்தி. அப்படத்தை முடித்துவிட்டு மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார்.
இந்தப்படத்தை வழக்கம்போல் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. பிரேமம் மலையாளப் படத்தின் மூலம் பிரபலமான சாய் பல்லவி இப்படத்தின் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல். கார்த்தி, சாய் பல்லவி உடன் மற்ற பாத்திரங்களின் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கும் இப்படத்துக்கு ரவி வர்மன் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகி இருக்கிறார்.