'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சமீபகாலமாக ஒரே டைரக்டரின் படங்களில் தொடர்ந்து நடித்தாலோ அல்லது யாராவது நடிகர்களுடன் அதிகமான செல்பிக்களை எடுத்து வெளியிட்டாலோ அந்த நடிகைகள் காதல் வளையத்திற்குள் சிக்கிக்கொள்கிறார்கள். அந்த வகையில், நானும் ரவுடிதான் படத்தில் நடித்து வந்தபோது அப்பட டைரக்டரான விக்னேஷ் சிவனுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார் நயன்தாரா. ஆனால் அது நயன்தாராவின் மார்க்கெட்டை எவ்வகையிலும் பாதிக்கவில்லை.
ஆனால், இதுபோன்ற கிசுகிசுக்களால் சிலநேரங்களில் மார்க்கெட் சரிவடைவதும் உண்டு. அதன்காரணமாக, தற்போது லட்சுமிமேனன், ஸ்ரீதிவ்யா போன்ற நடிகைகள் உஷாராகி விட்டனர். அதாவது எந்தெந்த டைரக்டர், ஹீரோக்களின் படங்களில் தாங்கள் தொடர்ந்து நடிக்கிறோமோ அவர்களை அண்ணன் என்று அழைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
இதில் லட்சுமிமேனனை எடுத்துக்கொண்டால் இதற்கு முன்பு, ஒருமுறை கிசுகிசுவில் சிக்கினார். அதையடுத்து இப்போது ஒரு டைரக்டருடன் காதல் கிசுகிசுவில் சிக்கியிருக்கிறார். ஆனால் இதை தொடரவிடக்கூடாது என்று நினைக்கும் லட்சுமிமேனன், தற்போது அந்த டைரக்டரை மற்றவர்களின் காதில் விழுமாறு அண்ணா அண்ணா என்று அழைக்கிறாராம். மீடியாக்களுக்கு பேட்டி கொடுக்கும்போதும் வார்த்தைக்கு வார்த்தை அண்ணன் என்று சொல்வதை வழக்கமாக்கிக்கொண்டுள்ளார் லட்சுமிமேனன்.