ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாய்ஸ் நாயகனான சித்தார்த் இப்போது வரை சாக்லேட் ஹீரோவாகத்தான் கருதப்பட்டு வருகிறார். சினிமாவில் தான் நடிக்க வந்த 12 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், ஜிகர்தண்டா படத்தில்தான் அந்த இமேஜை உடைத்தெறிந்து விட்டு ஆக்சன் நாயகனாக வேண்டும் என்று முயற்சி எடுத்தார். ஆனால், அந்த படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. விளைவு இப்போது வரை அவர் ரொமான்டிக் நாயகனாகத்தான் வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரை நம்பி ஆக்சன் கதைகளை படமாக்க டைரக்டர்களும் முன்வர தயங்கி நிற்கிறார்கள்.
அதனால், அடுத்தகட்ட முயற்சியாக தற்போது காமெடி கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறார் சித்தார்த். அதன்காரணமாக ஜில் ஜங் ஜக் என்ற படத்தில் காமெடி கதையில் நடித்துள்ளார். மேலும், சித்தார்த் படங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கதாநாயகிகள் இடம்பெற்று வந்தநிலையில், முதன்முறையாக இந்த படத்தில் கதாநாயகியே இல்லை. அதனால் ஒரு நடிகை மீதான கோபம் காரணமாகத்தான் அவர் இந்த படத்தில் ஹீரோயினே இல்லாத கதையில் நடிப்பதாக செய்தி பரவியிருக்கிறது.
ஆனால் இதுபற்றி சித்தார்த்தைக் கேட்டால், எந்த நடிகை மீதும் எனக்கு தனிப்பட்ட முறையில் கோபமில்லை. இந்த படத்தில் கதாநாயகிக்கு வேலை இல்லை. ஜில், ஜங், ஜக் என்ற மூன்று பேர் சம்பந்தப்பட்ட கதை இது. அதோடு கதாநாயகி இல்லாத குறையும் இந்த கதையில் இருக்காது. அந்த அளவுக்கு புதுமையான காமெடி கதையில் இப்படம் உருவாகியிருக்கிறது என்று கூறும் சித்தார்த், இந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து காமெடி கதைகளில் அதிகமாக நடிக்கயிருப்பதாகவும் கூறுகிறார்.