தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இசைஞானி இளைராஜா தாரை தப்பட்டை படம் வரை ஆயிரம் படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இதனை 999வது படமான ஷமிதாப் இந்திப் படத்தின் இயக்குனர் பால்கி மும்பையில் கொண்டாடினார். அமிதாப்பச்சன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். சென்னையில் நேரு உள் விளையாட்டரங்கில் பாலா, இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்து திட்டமிட்டார். அந்த நேரத்தில் சென்னையில் பேய் மழை, பெருவெள்ளம் வந்ததால் நடத்த முடியவில்லை. இப்போது இளையராஜா மியூசிக் மேனேஜ்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து விஜய் டி.வி பிரமாண்டாக நடத்துகிறது. வருகிற 27ந் தேதி நேரு உள்விளையாட்டரங்கில் இது நடக்கிறது.
இதுகுறித்து விஜய் டி.வி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இசையால் அனைவரையும் நெகிழச் செய்தவருக்கு இந்த விழா ஒரு சமர்ப்பணம். மக்கள் வியந்து ரசித்த இளையராஜாவின் இனிமையான பாடல்கள் அந்த பிரமாண்ட மேடையில் இளையராஜாவிற்கு காணிக்கையாக சமர்பிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த திரையுலகமும் பங்கேற்று இசைஞானிக்கு கவுரம் சேர்க்க இருக்கிறது. கலையுலம் கண்டிராத பெருவிழாவாக இது இருக்கும். என்கிறது விஜய் டி.வி.