இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் |
முன்னணி தெலுங்குப்பட இயக்குநரான எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் 'பாகுபலி'. தமிழ் - தெலுங்கு என ஒரே நேரத்தில் உருவான 'பாகுபலி' படம் ஹிந்தி, ஆங்கிலம், மலையாளம் என பல மொழிகளில் டப் செய்யப்பட்டது. வெளியான அனைத்து மொழிகளிலும் வெற்றியடைந்தது. இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் மிகப்பெரிய தொகையை வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றது.
கடந்த சில மாதங்களாக பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. தற்போது கேரளாவில் உள்ள காட்டுப்பகுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. என்றாலும், 'பாகுபலி 2' ஆம் பாகம் தாமதமாவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
இது பற்றி ராஜமௌலியிடம் கேட்டால், “படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடந்து வருகிறது. 2-ஆம் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. கடந்த படப்பிடிப்பை திட்டமிட்டதற்கு முன்னதாகவே முடித்துள்ளோம்.” என்று கூறியுள்ள ராஜமௌலி, "இந்தப் படத்தின் 3-ஆம் பாகமும் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. 'பாகுபலி'யின் கதை பெரியது. எனவே அது தொடரும்." என்றும் தெரிவித்துள்ளார்.
2-ஆம் பாகத்துக்கு முடிவு (Baahubali: The Conclusion) எனப் பெயர் வைத்தநிலையில் தற்போது 3 ஆம் பாகமும் இருப்பதாக சொல்வதால் பாகுபலி படத்தின் டேக்லைன் மாற வாய்ப்புள்ளதாகவே தோன்றுகிறது.