பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தனுஷை வைத்து வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் படம் 2011 ஆம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு ஏறக்குறைய ஐந்து வருடங்களுக்குப் பிறகுதான் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம்.... விசாரணை.... இன்று வெளியாகி உள்ளது. இடையில் தனுஷை வைத்து சூதாடி என்ற படத்தை இயக்கினார் வெற்றிமாறன். அந்தப் படம் பாதியோடு ட்ராப்பானது.
சிம்புவை வைத்து வட சென்னை என்ற படத்தை இயக்கும் வேலையில் இறங்கினார். இரண்டு வருடங்கள் வரை இழுத்தடித்தார் சிம்பு. கடுப்பான வெற்றிமாறன் மீண்டும் தனுஷைத் தேடி வந்தார். அதன் பிறகு தொடங்கப்பட்டதுதான் விசாரணை படம்.
தினேஷ், சமுத்திரக்கனி, ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்த விசாரணை படத்தை தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்தின் அனைத்து உரிமைகளையும் லைக்கா நிறுவனம் வாங்கியிருக்கிறது. ஆட்டோ டிரைவர் சந்திரகுமார் எழுதிய 'லாக்கப்' என்ற கதைதான் விசாரணை படமாகி இருப்பதாக சொல்லப்பட்டது.
உண்மையில் முழுப்படமும் லாக்கப் புத்தகத்தை மையப்படுத்தியது அல்ல. “இப்படத்தின் முதல் பாதி தான் லாக்கப் புத்தகத்தை மையப்படுத்தி இருக்கும். இரண்டாம் பாதி வேறு சில உண்மை சம்பவங்களை மையப்படுத்தி இருக்கும். மொத்தமாக பார்ப்பவர்களுக்கு விசாரணை ஒரு புது அனுபவமாக இருக்கும்.” என்று தெரிவித்துள்ளார் வெற்றிமாறன்.