பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
புதுயுகம் சேனலில் வருகிற 8ந் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர் பட்டுச்சேலை. திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகிறது. மாமியார் மருமகள் சண்டை, கணவனின் மனைவி சின்ன வீடு சண்டைகளிலிருந்து விலகி வித்தியாசமான காதல் கதையாக ஒளிபரப்பாகிறது பட்டுச்சேலை.
மிகப்பெரிய பட்டுச் சேலை கடை வைத்திருப்பவர் காஞ்சனா. தன் கடைக்கு போட்டியாக யார் கடை போட்டாலும் அவர்களை விரட்டி விட்டுத்தான் வேறு வேலை பார்ப்பார். அந்த அளவிற்கு கொடூரமானவர். அவரிடம் தவனைக்கு சேலை வாங்கி கிராமத்து மக்களுக்கு கடனுக்கு விற்பவர் தாமரை. வீரமான, நியாயமான பொண்ணு, மற்றவர்களுக்காக போராடுகிற பெண். காஞ்சனாவின் கடைக்கு அடிக்கடி வரும் தாமரைக்கும், காஞ்சனாவின் மகன் அஜய்க்கும் காதல் மலர்கிறது. எதிரில் கடை போட்டாலே ஆளை அழித்து விடும் காஞ்சனா, கோடீஸ்வரியான தன் மகனை சேலை விற்கும் பெண் காதலித்தார் விடுவாரா.?. காஞ்சனா, தாமரையின் மோதல்தான் கதை. இவர்களின் மோதலை மக்கள் எதுவரை ரசிக்கிறார்களோ அதுவரை சீரியல் தொடரும். இதுவரை அன்பான அம்மா கேரக்டரில் நடித்து வந்த மீனா குமாரி இதில் வில்லி காஞ்சனாவாக நடிக்கிறார்.