ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தன்னுடைய ரசிகர்கள் மிகவும் புத்திசாலிகள் என்று நடிகர் அக்ஷ்ய் குமார் கூறியுள்ளார். அக்ஷ்ய் குமார் நடிப்பில் ரிலீஸாக உள்ள படம் 'ஏர்லிப்ட்'. சமீபத்தில் இப்படத்தின் புரமோஷன் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அக்ஷ்ய், தனக்கு அனைத்து விதமான வேடங்களிலும் நடிக்க ஆசை என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது... ''என்னால் எல்லா விதமான படங்களில் நடிக்க முடியும், அந்த நம்பிக்கை என்னுள் இருக்கிறது. எனக்கு பீகாரி, பெங்காலி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி போன்ற மொழி படங்களிலும் நடிக்க ஆசையாய் இருக்கிறது. நான் ஆரம்பகாலத்தில் சினிமாவிற்கு வந்தபோது கன்னட படத்தில் கூட நடித்திருக்கிறேன். என் ரசிகர்கள் என்னை எல்லாவிதமான வேடங்களிலும் ரசிப்பார்கள், குறிப்பாக நான் நெகட்டீவ் வேடத்தில் நடித்தால் கூட ரசிப்பார்கள். ஏனென்றால் என் ரசிகர்கள் எல்லோரும் மிகவும் புத்திசாலிகள் என்று கூறியுள்ளார்.