Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

இந்தியனாக இருப்பது பெருமை - அக்ஷ்ய் குமார்

19 ஜன, 2016 - 21:50 IST
எழுத்தின் அளவு:
I-am-proud-to-be-Indian--Akshay-Kumar

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் அக்ஷ்ய் குமாரும் ஒருவர். காமெடி, ஆக்ஷ்ன் என எப்படிப்பட்ட ரோல்கள் கொடுத்தாலும் அசத்தக்கூடியவர். இதுநாள் வரை ஆக்ஷ்ன், ரொமான்ஸ் என்று அசத்தி வந்த அக்ஷ்ய், இப்போது ''ஏர்லிப்ட்'' படம் மூலம் ஒரு வித்தியாசமான ரோலில் அசத்த காத்திருக்கிறார். வருகிற ஜன., 22 ம் தேதி ஏர்லிப்ட் படம் ரிலீஸாக உள்ளது. இப்படம் பற்றியும், இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து அக்ஷ்ய் குமார் அளித்த பேட்டி இதோ...


ஏர்லிப்ட் படம் பற்றி சொல்லுங்க.?


'ஏர்லிப்ட்' படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 1990-ம் ஆண்டுகளில் ஈராக்-குவைத்தில் நடந்த போரின் போது, சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் அங்கு பாதிக்கப்பட்டனர். இதில் பாதிக்கும் மேற்பட்ட இந்தியர்கள் பெரிய கோடீஸ்வரர்களாக இருந்தவர்கள். ஆனால் இந்த போரினால் அவர்கள் அனைவரும் ஏழ்மையான நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். உண்ண உணவு கூட இன்றி கஷ்டப்படுகிறார்கள். ஏன் சொந்த நாட்டிற்கு கூட அவர்கள் செல்ல முடியாத சூழல். இப்படிப்பட்ட உண்மை சம்பவத்தை எங்களால் முடிந்தவரை சிறப்பாக காண்பிக்க முயற்சித்துள்ளோம். அதேசமயம், இப்படத்தில் வரும் காட்சிகள் எந்த போரையும் மையப்படுத்தி உருவாக்கப்பட்டதல்ல.


படத்தில் உங்க கேரக்டர் பற்றி சொல்லுங்க.?


ஏர்லிப்ட் படத்தில் நான் ரஞ்சித் கேத்யால் கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். ரஞ்சித் அறிவான, திறமையான தொழிலதிபர். தனி ஆளாக நின்று போரினால் பாதிக்கப்பட்ட இந்தியர்களை காப்பாற்றி தன்னால் முடிந்த உதவிகளை செய்யும் வலுவான கேரக்டர். இதற்காக அவர் என்னவெல்லாம் கஷ்டப்படுகிறார் என்பது தான் படத்தில் எனது ரோல்.


இந்தப்படத்திற்காக உங்களை எந்த மாதிரி தயார்படுத்தி கொண்டீர்கள்.?


ஆமாம் இந்தப்படத்திற்காக நிறைய உழைத்துள்ளேன். முதலில், நான் குவைத்திற்கு சென்று அங்கு போர் நடந்த இடங்களை பார்வையிட்டேன். இந்த சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட, அல்லது அந்த அனுபவம் தெரிந்த சுமார் 5 முதல் 6 பேர் வரை சந்தித்தேன். அவர்களிடமிருந்து நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன். அவர்கள் சொன்ன விஷயத்தை எல்லாம் முடிந்த வரை இந்தப்படத்தில் கொண்டு வந்துள்ளோம். அப்புறம் இன்னொரு விஷயம் இந்தப்படத்திற்காக நான் அரபிக் மொழி எல்லாம் கற்கவில்லை. டயலாக்கை மட்டும் கேட்டு புரிந்து கொண்டேன். நான் அரபிக் மொழி கற்றதாக வந்த செய்தி உண்மையில்லை.


எங்கெல்லாம் இப்படத்தின் ஷூட்டிங் நடந்தது.?


துபாயிலிருந்து சுமார் 30கி.மீ தொலைவில் உள்ள ரசல் கைமா எனும் இடத்தில் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். இங்கு தவிர்த்து மும்பை, ராஜஸ்தான் உள்ளிட்ட பல பகுதிகளிலும் ஷூட்டிங் நடந்தது. இப்படத்தின் இயக்குநர் புதுமுகம் ராஜா கிருஷ்ணா மேனன், அவர் புதுமுகம் என்றே சொல்ல முடியாது, அந்தளவுக்கு சிறப்பாக இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தை பார்த்த பின்னர் யாரும் அவரை முதல்படத்தை இயக்கியவர் என்று சொல்ல முடியாது. குவைத்தில் ராஜாவுக்கு சில நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்தும் சில விஷயங்களை கேட்டும் இந்தப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குநர்.


கப்பார், பேபி, ஹாலிடே போன்ற படங்களில் ஊழல், பயங்கரவாதம் என தொடர்ந்து இதுபோன்ற படங்களில் நடிக்க காரணம் எதுவும் உண்டா.?


முதலில் எனது தந்தை ஒரு ராணுவ வீரர், ஆகையால் என் தாய்நாட்டின் மீது அதிக பற்று எனக்கு உள்ளது. மேலும் ராணுவ வீரன், போலீஸ் அதிகாரி போன்ற வேடங்களுக்கு எனது உடல் அமைப்பு பொருத்தமாக உள்ளது. ஆகையால் நான் இதுபோன்ற கேரக்டர்களை பெரிதும் விரும்புகிறேன். இவை எல்லாவற்றுக்கு மேலாக நான் எனது தாய்நாட்டை பெரிதும் நேசிக்கிறேன், நான் இந்தியன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன். இதுபோன்ற படங்களில் மூலம் நாட்டுக்கு சில சமூக கருத்துக்களை சொல்ல விரும்புகிறேன்.


உங்களது படத்தோடு கயா கூல் ஹெய்ன் கம் 3 படமும் ரிலீஸாகிறது, இதனால் உங்கள் படத்திற்கு எதுவும் பாதிப்பு ஏற்படுமா.?


நிச்சயமாக இருக்காது. ஏனென்றால் இரண்டு படமும் வெவ்வேறு விதமான கதைக்களத்தை கொண்டவை, முற்றிலும் வித்தியாசமான படங்கள். நிச்சயம் ரசிகர்களுக்கு எந்தப்படம் பிடிக்குமோ, அதை கண்டிப்பாக ரசிப்பார்கள். பிறரது படங்கள் ரிலீஸாவதால் என் படத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று நினைக்கிறேன்.


புதிய தலைமுறையிடம் நீங்கள் எந்தமாதிரி மாற்றத்தை உணர்ந்துள்ளீர்கள்.?


இன்றைய இளம் தலைமுறைகளை பார்த்து நான் ஆச்சர்யப்படுகிறேன். யாராவது தப்பு செய்தால் அதை உடனடியாக அவரகள் தட்டிக்கேட்கிறார்கள். மேலும் அவர்கள் புதிது புதிகாக செய்ய நினைக்கிறார்கள். அவர்களிடத்தில் சமூக வலைதளம் இருப்பதால் அதை எல்லோரிடமும் கொண்டு போய் ஈஸியாக சேர்க்கிறார்கள். இது வரவேற்க தக்கது.


இவ்வாறு அக்ஷ்ய் குமார் கூறினார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in