'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
'பிக்கு' படத்தை தொடர்ந்து பாலிவுட்டின் பிக்ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாக உள்ள படம் 'வசீர்'. அமிதாப் உடன் பர்கான் அக்தரும் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார். இந்தப்படத்தில் அமிதாப் கால்களை இழந்த மாற்றுத்திறனாளி வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் நாளை(ஜன.8ம் தேதி) ரிலீஸாக உள்ள நிலையில், இப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி நடிகர் அமிதாப் பச்சன் நம்மோடு பகிர்ந்து கொண்டதாவது...
வசீர் படம் பற்றி சொல்லுங்க.? ஷமிதாப் படத்திற்கும் இந்தப்படத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா.?
வசீர் படத்தை பற்றி ஒருவரியில் சொல்ல வேண்டுமானால், இந்தப்படம் உணர்வுப்பூர்வமான படம். இந்தப்படத்தில் இரண்டு முக்கிய கேரக்டர்கள் உள்ளன. ஒரு கேரக்டரில் நானும், மற்றொரு கேரக்டரில் பர்கான் அக்தரும் நடித்துள்ளார். இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் அவர்களுக்கு இடையே உள்ள பிரச்னையை தீர்க்கும் விதம் தான் படத்தின் கதை. இந்தப்படத்தில் நாங்கள் இருவரும் வித்தியாசமான ரோலில் நடித்துள்ளோம். இந்தப்படம் கண்டிப்பாக எனது முந்தைய படமான 'ஷமிதாப்' படத்தை போன்று இருக்காது. இரண்டு படங்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. ஆகையால் இந்தப்படத்தை எனது முந்தைய படத்தோடு ஒப்பிடாதீர்கள்.
வசீரில் இரண்டு கால்களை இழந்த நபராக நடிக்கிறீர்கள்... இந்த அனுபவம் பற்றி சொல்லுங்க.?
ஆமாம், 'வசீர்' படத்தில் ஒரு விபத்தின் போது இரண்டு கால்களை இழந்த நபராக, மாற்று திறனாளியாக நடிக்கிறேன். அதுவும் இந்தப்படத்தில் ஒரே வீல்சேரில் அமர்ந்து நடிப்பது கொஞ்சம் சிரமமாக இருந்தது. ஏனென்றால் என் கால்கள் கட்டப்பட்டிருந்தது. இந்தமாதிரி நடிக்கும் போது எனக்கு வலி ஏற்பட்டது. ஆனால் ஒரு நடிகன், வலி எல்லாவற்றையும் பொறுத்து கொண்டு தான் நடிக்க வேண்டும். நான் எனது வலியை வெளிகாட்டியது கிடையாது. படத்தின் கதைக்கு என்ன தேவையோ அதை ஒரு நடிகன் செய்தாக வேண்டும்.
நிறைய படங்களில் நடித்திருக்கிறீர்கள், உங்களுக்கு பிடித்த படம், கேரக்டர் எது.?
இந்த கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. ஏனென்றால் நான் நடிக்கும் ஒவ்வொரு படமும் எனக்கு ஒருவித அனுபவத்தையும், மகிழ்ச்சியையும் தந்தவை, ஒவ்வொரு படமும் எனக்கு சிறப்பானவை தான். படத்தில் நானும் ஒரு அங்கம், என்னுடன் பலரும் நடித்திருக்கிறார்கள், பணியாற்றுகிறார்கள், இவர்கள் எல்லாம் சேர்ந்து தான் ஒரு படம் உருவாக காரணமாகிறது. ஆகவே, இந்தப்படம் தான் நடிக்கும், இந்த ரோல் தான் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. மேலும் எந்த ஒரு படமும் ஹீரோவால் மட்டும் ஹிட்டாகிவிடாது, படத்தில் பணியாற்றிய ஒட்டுமொத்த டீமால் மட்டும் தான் அது ஹிட்டாகும். என்னைப்பொறுத்தவரை நான் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும் 100 சதவீதம் உழைப்பை தருகிறேன். எல்லா படங்களும் எனக்கு பிடிக்கும்.
இன்றைக்கு அனேக நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களை, தங்களது படத்தின் புரமோஷன்களுக்கு பயன்படுத்துகிறார்கள். இதுப்பற்றி உங்கள் கருத்து.?
சமூக வலைதளங்களை மற்ற நட்சத்திரங்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை பற்றி நான் எதுவும் கூற முடியாது. என்னை பொறுத்தவரை நான், என் படங்களின் புரமோஷன்களை ஒருபோதும் சமூக வலைதளங்களில் பயன்படுத்தியது கிடையாது. இந்த வலைதளங்கள் எல்லாம் ரசிகர்களோடு என்னை இணைக்கும் பாலமாக தான் இருக்கிறது. ரசிகர்களின் கேள்விக்கு நான் பதில் அளிக்கிறேன். என்னுடைய வலைதளங்களில் எப்போதும் எனது கருத்துக்களை அனைவரும் ஆதரிப்பது கிடையாது, குறைகள் இருந்தால் அதை சுட்டிக்காட்டவும் செய்கிறார்கள். ஒவ்வொரு நாளும் நான் எனது பிளாக்கை பயன்படுத்துகின்றேன், தினமும் 500 முதல் 600 பேரை பதில் அளிக்கிறார்கள். மேலும் இந்த வலைதளங்கள் மூலமாக புதிய விஷயங்களையும் கற்று கொள்கிறேன்.
உங்களின் அடுத்தடுத்த படங்கள் பற்றி சொல்லுங்க.?
வசீர் படத்திற்கு பிறகு நான் நிறைய படங்களில் நடிக்கிறேன். ரிபுதாஸ் குப்தாவின் 'டென்3என்', ராஜ்குமார் சந்தோஷியின் 'புத்தம் சரணம் கச்சாமி', சந்திரபிரகாஷ் திவேதியின் 'தி லெஜெண்ட் குணால்', இவை தவிர இன்னும் இரண்டு-மூன்று பெயரிடப்படாத படங்களில் நடிக்கிறேன். மேலும் டிவி தொடர்கள் சிலவற்றிலும் வாய்ப்பு வருகிறது.
பாலிவுட் நட்சத்திரங்கள் சமூகசேவையில் ஈடுபடுவது பற்றி உங்கள் கருத்து.?
உண்மை தான் இன்றைக்கு நிறைய பாலிவுட் நட்சத்திரங்கள் சமூகசேவை தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள். ஏழை விவசாயிகளுக்கு உதவுதல், நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல் என... இப்படி நிறைய விஷயங்களில் நட்சத்திரங்கள் உதவுகிறார்கள். இது பாராட்டுகுரிய விஷயம். சில பிரபலங்கள் விளம்பரம் இன்றி உதவி வருகிறார்கள். அதில் நானும் ஒருவன். சில ஆண்டுகளுக்கு முன்னர் விசாகப்பட்டிணத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உதவினேன், சில தினங்களுக்கு முன்னர் கூட வறட்சியால் தற்கொலை செய்ய இருந்த விவசாயிகள் சிலருக்கு பண உதவி செய்தேன். இதுபோன்று நிறைய உதவிகளை செய்துள்ளேன், செய்தும் வருகிறேன். மேலும் சில தொண்டு நிறுவனங்களுக்காக பிரசாரமும் செய்கிறேன். இதுபோன்ற விஷயங்கள் எல்லாம், நான் வாழ்நாள் முழுக்க தொடர்ந்து செய்வேன்.
இவ்வாறு அமிதாப் பச்சன் கூறினார்.