டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சென்னை எக்ஸ்பிரஸ் படத்திற்கு பிறகு மீண்டும் ஷாரூக்கான்-ரோகித் ஷெட்டி கூட்டணியில் வெளியாகியுள்ள படம் தில்வாலே. இப்படத்தில் ஷாரூக்கான் உடன் ஐந்து வருட இடைவெளிக்கு பிறகு கஜோலும் சேர்ந்துள்ளார். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. கடந்தவாரம் டிச.18ம் தேதி வெளியான இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. விமர்சன ரீதியாக இப்படம் நன்றாக இல்லை என்றே கருதுகின்றனர். ஆனாலும் இப்படம் மூன்று நாளில் ரூ.100 கோடி வசூலை எட்டியிருக்கிறது. ஆனாலும் இந்த வசூல் குறைந்துள்ளதாக ரோகித் ஷெட்டி கூறுகிறார்.
இதுப்பற்றி ரோகித் கூறியிருப்பதாவது... தில்வாலே படத்துடன் பாஜிராவ் மஸ்தானி படமும் வெளியாகும் என்று தெரியும். ஆகையால் தான் அதற்கு ஏற்றபடி தில்வாலே படத்தை மெருகேற்றினோம். ஆனால் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இப்படத்தின் வசூல் குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் இப்படத்திற்கு தடை உள்ளது. கிட்டத்தட்ட 40 தியேட்டர்களில் தில்வாலே படம் வெளியாகவில்லை. ஆகையால் தான் படத்தின் வசூல் குறைந்தது என்று கூறியுள்ளார்.