ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
1950ம் ஆண்டு முதல் 80ம் ஆண்டுவரை பாலிவுட் சினிமாவின் முடிசூடா மன்னனாக இருந்தவர் திலீப்குமார். உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்ட முதல் நடிகர். 80 களில் புதிய தலைமுறைகள் வந்ததும் சினிமாவில் இருந்து சற்று ஒதுங்கினார் என்றாலும் அவ்வப்போது படங்களில் நடித்து வந்தார். 1998ல் நடித்த குயிலா என்ற படம்தான் அவர் கடைசியாக நடித்து. அதன் பிறகு முழுமையாக சினிமாவை விட்டு விலகினார்.
தற்போது 91 வயதாகும் திலீப்குமார் மும்பையில் தனது மனைவி சாய்ராபானுவுடன் வசித்து வருகிறார். திலீப்குமாரின் சாதனைகளுக்காக கடந்த ஆண்டு அவருக்கு பத்மவிபூஷன் விருது வழங்கப்பட்டது. அப்போது அவர் உடல் நலமில்லாமல் இருந்ததால் அந்த விருதை அவர் விழாவில் வந்து பெற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில், அவருக்கு அறிவிக்கப்பட்ட பத்மவிபூஷன் விருதை வழங்க மத்திய அமைச்சார் ராஜ்நாத் சிங் இன்று மும்பை வருகிறார். திலீப்குமாரின் வீட்டிற்கு சென்று அவரை நேரில் சந்தித்து விருதை வழங்க இருக்கிறார்.