அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மலையாள திரையுலகில் பல நடிகர்கள், இயக்குனர்கள் என தனித்தனியாகவும், கூட்டாகவும் சேர்ந்து தங்களது நிவாரண உதவி பொருட்களை சென்னைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.. இந்த நிலையில் நடிகர் திலீப் சென்னை மக்களுக்காக 5 லோடு மினரல் வாட்டர் பாட்டில்களை அனுப்பி வைத்துள்ளார்.. சென்னையில் தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவை பணமல்ல, சுத்தமான குடிநீரும், உணவும், உடையும் தான்.. அதனால் தான் இங்கிருந்து தண்ணீர் அனுப்பிய வைத்துளேன்” என்கிறார் திலீப்.
மேலும், “சினிமாவில் நுழைந்த காலகட்டத்தில் இருந்து சென்னை எனது கனவு நகரமாக இருந்து வருகிறது. இன்று கண்முன் இவ்வளவு பாதிப்பிற்கு உள்ளாகி இருப்பதை காணும்போது மனதுக்கு வருத்தமாக இருக்கிறது.. சென்னையில் வசதி படைத்தவர்கள் நிறைய இருப்பதால் பணத்தேவை என்பது ஒரு பொருட்டே அல்ல.. அதேபோல உணவும் அங்குள்ளவர்களே ஏற்பாடு செய்துவிடுவார்கள்.. குடிநீர் பாட்டில்கள் தயாரித்துவரும் நிறுவனங்களும் இந்த மழையால் நிச்சயம் முடங்கி இருக்கும். அதனால் மக்களுக்கு தண்ணீர் மிக முக்கியம் என்பதால் தண்ணீர் பாட்டில்களை அனுப்பி வைத்துள்ளோம்” என கூறியுள்ள திலீப் சென்னை மக்கள் இந்த சோதனைகளை தாண்டி விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.