பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
எண்பது, தொண்ணூறுகளில் தமிழில் மட்டுமல்ல, அதை தொடர்ந்து இந்தியிலும் கொடிகட்டி பறந்தவர்கள் தான் ஸ்ரீதேவியும் ஜெயப்ரதாவும்.. இப்போது இருக்கும் நயன்தாரா, சமந்தா போல, அப்போதே இருவருக்கும் யார் நம்பர் ஒன் என்கிற கடுமையான போட்டிகளும் நடந்தன. இந்த ரணகளத்திலும் கூட இவர்கள் இருவரையும் இந்தியில் தான் இயக்கிய 'ஆக்ரி ரஸ்தா' படத்தில் ஒன்றாக நடிக்க வைத்து இவர்களுக்கிடையேயான பனிப்போரை முடிவுக்கு கொண்டுவர முயற்சிகள் எடுத்தார் இயக்குனர் கே.பாக்யராஜ். ஆனால் பலன் தான் கிடைக்கவில்லை.
அதன்பின் ஜெயப்ரதா அரசியலுக்கு சென்றுவிட, ஸ்ரீதேவியும் போனிகபூரை மணந்து செட்டிலாகிவிட்டார். ஆனால் சமீபத்தில் நடைபெற்ற ஜெயப்ரதாவின் மகன் சித்துவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பார்வையாளர்களை ஆச்சர்யப்படுத்தினார் ஸ்ரீதேவி. அதுமட்டுமல்ல ஸ்ரீதேவியை கட்டித்தழுவி தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினார் ஜெயப்ரதா. இதன்பின்னையில் இருந்தவர் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தான் என்று சொல்லப்படுகிறது. எப்படியோ ஒருவழியாக இருவருக்கும் இடையேயான பனிப்போர் முடிவுக்கு வந்ததே அதுபோதும்..