பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகை ராதிகாவின் மகள் ரயான். இவருக்கும், கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுனுக்கும் அடுத்தாண்டு திருமணம் நடைபெற இருக்கிறது. சமீபத்தில் இவர்களது நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் சரத்குமாரை என் வளர்ப்பு தந்தையாக கருதவில்லை என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது... என்னுடைய நிச்சயதார்த்தத்தின் போது வெளியான செய்திகளில் சரத்குமாரை என் வளர்ப்பு தந்தை என்றே எழுதினார்கள். இது எனக்கு மிகவும் வருத்தத்தை தந்தது. எல்லா விஷயங்களிலும் அவர் என்னை ஊக்கப்படுத்தி கொண்டே இருப்பார், எனக்கு எப்போதும் துணையாக இருக்கிறார். அவரை என் வளர்ப்பு தந்தையாக பார்க்கவில்லை. அன்பை காட்டும் ஒரு தந்தையை விட மேலானவராகவே அவரை பார்க்கிறேன் என்று கூறியுள்ளார் ரயான்.