ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்நாட்டில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பெய்து வரும் கடும் மழையினால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் கனமழை வந்து மக்களை மிரட்டிக் கொண்டிருக்கிறது.
இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் உதவிகளை வழங்குவது வழக்கமான ஒன்று. ஆனால், இவ்வளவு கடுமையாக பாதிக்கப்பட்ட பின்னும் பலர் நிவாரண உதவிகளை வழங்காதது பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. எப்படியோ சூர்யா குடும்பத்தினர் கடந்த வாரம் வெள்ள நிவாரண உதவியை ஆரம்பித்து வைத்தனர். அதன் பின் ஒவ்வொரு நடிகராக தங்களது நிதியை நடிகர் சங்கத் தலைவர் நாசரிடம் வழங்கி வருகின்றனர்.
ஆனாலும், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இதுவரை எந்த வித அறிவிப்பையும் வெளியிடவில்லை என நாம் காலையில் செய்தி வெளியிட்டிருந்தோம். சற்று முன்னர் ரஜினிகாந்த் 10 லட்ச ரூபாய் நிதி உதவியை வழங்குவதாக ஸ்ரீ ராகவேந்திரா அறக்கட்டளை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான செக்கை அவர்கள் நடிகர் சங்கத் தலைவர் நாசருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ரஜினிகாந்த் அவருடைய உதவியை அறிவித்துவிட்டார், அடுத்து கமல்ஹாசன், விஜய், அஜித் அறிவிப்பார்களோ?